| `கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்புழு | | | - குறள் 984 | | |
எனக் குற்றுகர ஈற்று நேர்பு அசைச்சீரான் இறுதலும், |
| `அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகுழு | | | - குறள் 1 | | |
எனக் குற்றுகர ஈற்று நிரைபு அசைச்சீரான் இறுதலும், |
| `இனமலர்க் கோதாய் இலங்குநீர்ச் சேர்ப்பன் புனைமலர்த் தாரகலம் புல்லுழு | | | - யா. கா. 26 மே | | |
என முற்றுகர ஈற்று நேர்நேர் இயற்சீரான் இறுதலும், |
| `மஞ்சுசூழ் சோலை மலைநாட மூத்தாலும் அஞ்சொல் மடவார்க்(கு) அருளுழு | | | - யா. கா. 26 மே | | |
என முற்றுகர ஈற்று நிரைநேர் இயற்சீரான் இறுதலும் கொள்க. `மற்றுழு என்ற மிகையானே, ஏந்திசைச் செப்பலும் தூங்கிசைச் செப்பலும், ஒழுகிசைச் செப்பலும் எனச் செப்பல் ஓசை மூன்று வகைப்படும்; |
| `வெண்சீர் வெண்டளை யான்வரும் யாப்பை ஏந்திசைச் செப்பல் என்மனார் புலவர்ழு | | | | | |
எனவும், |
| `இயற்சீர் வெண்டளை யான்வரும் யாப்பைத் தூங்கிசைச் செப்பல் என்மனார் புலவர்ழு | | | | | |
எனவும், |
| `வெண்சீர் ஒன்றலும் இயற்சீர் விகற்பமும் ஒன்றிய பாட்டே ஒழுகிசைச் செப்பல்ழு | | | | | |
எனவும் கூறுப ஆகலின். இவற்றிற்குச் செய்யுள்: |
| `யாதானும் நாடாமால்; ஊராமால்; என்ஒருவன்? சாந்துணையும் கல்லாத ஆறுழு | | | - குறள் 397 - ஏந்திசைச் செப்பல் | | |
எனவும். |