செய்யுளியல் - நூற்பா எண் 21 | 109 | | ஒரு விகற்பத்தான் வந்த நேரிசை வெண்பாவிற்குச் செய்யுள்: | | `அரிய வரைகீண்டு காட்டுவார் யாரே! பெரியவரை வயிரம் கொண்டு; - தெரியின், கரிய வரைநிலையார் காய்ந்தாலென் செய்வர்? பெரிய வரைவயிரம் கொண்டு' | | | - யா. கா. 24 மே | | | எனவும், | ஈரசையான் ஆசுஇட்டு இரு விகற்பத்தான் வந்த ஆசிடை நேரிசை வெண்பாவிற்குச் செய்யுள் : | | `தாமரையின் தாதாடித் தண்டுவலைச் சேறளைந்து, தாமரையின் நாற்றமே தான்நாறும்; - தாமரைபோல் கண்ணான், முகத்தான், கரதலத்தான், சேவடி,எம் கண்ஆர்வம் செய்யும் கருத்து' | | | - யா. கா. 24 மே. | | | [நாறும் என்பது ஆசு] | எனவும், | ஓர் அசையான் ஆசுஇட்டு இரு விகற்பத்தான் வந்த ஆசிடை நேரிசை வெண்பாவிற்குச் செய்யுள் : | | `கருமமும் உள்படா, பேசகமும் துவ்வா, தருமமும் தக்கார்க்கே செய்யா, - ஒருநிலையே முட்டின்று மூன்றும் முடியுமேல், அஃதென்ப; பட்டினம் பெற்ற கலம்' | | | - யா. கா. 24 மே; நாலடி 250 | | | [செய்யா என்பதிலுள்ள யா என்பது ஆசு] | எனவும், | ஈரசையான் ஆசுஇட்டு ஒரு விகற்பத்தான் வந்த ஆசிடை நேரிசை வெண்பாவிற்குச் செய்யுள் : | | `வஞ்சியேன் என்றவன்றன் ஊர்உரைத்தான்; யானுமவன் வஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தேன்; - வஞ்சியான், வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான்; வஞ்சியாய் வஞ்சியார் கோ' | | | - யா. கா. 24 மே. | | | [நேர்ந்தேன் - ஆசு] | எனவும், | |
|
|
|