பக்கம் எண் :

110

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

ஓர் அசையான் ஆசுஇட்டு ஒரு விகற்பத்தான் வந்த ஆசிடை நேரிசை
வெண்பாவிற்குச் செய்யுள் :

 

`ஆத்த அறிவினர் ஆண்டிளையர் ஆயினும்
காத்தோம்பித் தம்மை அடக்குப; - மூத்தொறூஉம்
தீத்தொழிலே கன்றித் திரிதந்து, எருவைபோல்,
போத்தறார் புல்லறிவி னார்'
 
 

- யா. கா. 24 மே. நாலடி. 351

 

[அடக்குப என்பதில் பகரம் ஆசு]

எனவும்,

ஒரு விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பாவிற்குச் செய்யுள் :

 

`வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்,
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்;
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்,
வைகலை வைத்துணரா தார்.'
 
 

- யா. கா. 25 மே; நாலடி. 39

 

[வைகுமென் என்பதிலுள்ள என் என்பது ஆசு]

எனவும்,

இரு விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பாவிற்குச் செய்யுள் :

 

`இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்றாது,
`பின்றையே நின்றது கூற்றம் என்றெண்ணி,
ஒருவுமின் தீயவை ; ஒல்லும் வகையான்
மருவுமின்; மாண்டார் அறம்.'
 
 

- யா. கா. 25 மே; நாலடி. 36

 
எனவும்,

பல விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பாவிற்குச் செய்யுள் :

 

`கடற்குட்டம் போழ்வர் கலவர்; படைக்குட்டம்
பாய்மா உடையான் உடைக்கிற்கும்; தோமில்
தவக்குட்டம் தன்னுடையான் நீந்தும் ; அவைக்குட்டம்
கற்றான் கடந்து விடும்.'
 
 

- யா. கா. 25 மே; நான்மணி 18

 
எனவும்,