பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 21

111

 

இரண்டாம் அடி இறுதி தனிச்சொல் பெற்று மூன்று விகற்பத்தான் வந்த
இன்னிசை வெண்பாவிற்குச் செய்யுள் :

 

`அங்கண் விசும்பில் அகன்நிலாப் பாரிக்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் ; - திங்கள்
மறுஆற்றும் ; சான்றோர்அஃ தாற்றார், தெருமந்து
தேய்வர்; ஒருமா சுறின்.'
 
 

- யா. கா. 25 மே; நாலடி. 151

 
எனவும்,

மூன்றாம் அடி இறுதி தனிச்சொல் பெற்று இரு விகற்பத்தான் வந்த
இன்னிசை வெண்பாவிற்குச் செய்யுள் :

 

`வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லை;
அளந்தன போகம் அவரவர் ஆற்றான்;
விளங்காய் திரட்டினார் இல்லை, களங்கனியைக்
காரெனச் செய்தாரும் இல்.'
 
 

 - யா. கா. 25 மே; நாலடி, 103

 
எனவும்,

அடிதொறும் தனிச்சொல் பெற்று மூன்று விகற்பத்தான் வந்த இன்னிசை
வெண்பாவிற்குச் செய்யுள் :

 

`இன்னாமை வேண்டின் இரவெழுக - இந்நிலத்து
மன்னுதல் வேண்டின் இசைநடுக - தன்னோடு
செல்வது வேண்டின் அறஞ்செய்க - வெல்வது
வேண்டின் வெகுளி விடல்.'
 
 

- யா. கா. 25 மே; நான்மணி. 17

 
எனவும்,

ஐந்தடியான் வந்த ஒரு விகற்பப் பஃறொடை வெண்பாவிற்குச் செய்யுள் :

 

`சேற்றுக்கால் நீலம் செருவென்ற வேந்தன்வேல்
கூற்றுறழ் மொய்ம்பின் பகழி பொருகயல்