பக்கம் எண் :

112

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

 

தோற்றம் தொழில்வடிவு தம்முள் தடுமாற்றம்,
வேற்றுமை இன்றியே ஒத்தன; மாவேடர்
ஆற்றுக்கால் ஆட்டியர் கண்ழு
 
 

- யா. கா. 25 மே.

 
எனவும்,

ஆறடியான் வந்த பல விகற்பப் பஃறொடை வெண்பாவிற்குச்செய்யுள்:

 

`பன்மாடக் கூடல் மதுரை நெடுந்தெருவில்
என்னொடு நின்றார் இருவர்; அவருள்ளும்
பொன்னோடை நன்றென்றாள் நல்லளே; பொன்னோடைக்
கியானைநன் றென்றாளும் அந்நிலையள்; யானை
எருத்தத் திருந்த இலங்கிலைவேல் தென்னன்
திருத்தார்நன் றென்றேன்; தியேன்ழு
 
 

- யா. கா. 25 மே.

 
எனவும்,

ஏழடியான் வந்த பல விகற்பப் பஃறொடை வெண்பாவிற்குச் செய்யுள்:

 

`வையகம் எல்லாம் கழனியா, வையகத்துச்
செய்யகமே நாற்றிசையின் தேயங்கள் - செய்யகத்து
வான்கரும்பே தொண்டை வளநாடு, வான்கரும்பின்
சாறேஅந் நாட்டுத் தலைஊர்கள், சாறட்ட
கட்டியே கச்சிப் புறமெல்லாம், கட்டியுள்
தானேற்றம் ஆய சருக்கரை மாமணியே,
ஆன்ஏற்றான் கச்சி அகம்ழு
 
 

- யா. கா. 25 மே.

 
எனவும்,

இரு விகற்பத்தான் வந்த நேரிசைச் சிந்தியல் வெண்பாவிற்குச் செய்யுள:

 

`நற்கொற்ற வாயில் நறுங்குவளைத் தார்கொண்டு
சுற்றும்வண் டார்ப்பப் புடைத்தாளே;- பொற்றேரான்
பாலைநல் வாயில் மகள்ழு
 
 

- யா. கா. 26 மே.

 
எனவும்,