பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 21

113

 

ஒரு விகற்பத்தான் வந்த நேரிசைச் சிந்தியல் வெண்பாவிற்குச் செய்யுள் :

 

`அறிந்தானை ஏத்தி, அறிவாங் கறிந்து,
செறிந்தார்க்குச் செவ்வ னுரைப்பச் - சிறந்தார்,
சிறந்தமை ஆராய்ந்து கொண்டு'
 
 

- யா. கா. 26 மே.

 
எனவும்,

ஒரு விகற்பத்தான் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பாவிற்குச் செய்யுள் :

 

`நறுநீல நெய்தலும் கொட்டியும் தீண்டிப்
பிறநாட்டுப் பெண்டிர் முடிநாறும்; பாரி
பறநாட்டுப் பெண்டிர் அடி'
 
 

 - யா. கா. 26 மே.

 
எனவும்,

இரு விகற்பத்தான் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பாவிற்குச் செய்யுள் :

  `சுரைஅழ அம்மி மிதப்ப, வரைஅனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலைஎன்ப;
கானக நாடன் சுனை'
 
 

- யா. கா. 26 மே.

 
எனவும்,

மூன்று விகற்பத்தான் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பாவிற்குச் செய்யுள் :

 

`முல்லை முறுவலித்துக் காட்டின - மெல்லவே
சேயிதழ்க் காந்தள் துடுப்பீன்ற - போயினார்
திண்தேர் வரவுரைக்கும் கார்'
 
 

- யா கா. 26 மே.

 
எனவும் வரும். பிறவும் வந்துழிக் கண்டுகொள்க.

     இனிச் செப்பல் ஓசையில் சிதையாது நேரும் நிரையும் நேர்பும் நிரைபும் ஆகிய
சீர்களை இறுதியாக உடைய சிந்தடியான் முடியும் வெண்பாக்களை ஓசை ஊட்டுமாறு.