பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 21

121

 

 

`தனிச்சொல் தழுவல ஆகி விகற்பம்
பலபல தோன்றினும் ஒன்றே வரினும்
இதற்பெயர் இன்னிசை என்றிசி னோரே.'
 
 

- காக்கை.

 

 

`ஒன்றும் பலவும் விகற்பாய்த் தனிச்சொல்
இன்றி வருவன ; இன்னிசை வெண்பா.'
 
 

 - சிறுகாக்கை

 

 

`ஒன்றும் பலவும் விகற்பாய்த் தனிச்சொல்
இன்றி நடப்பது ; இன்னிசை வெண்பா.'
 
 

 - அவிநயம்

 

 

`ஒருவிகற் பாகித் தனிச்சொல் இன்றியும்,
இருவிகற் பாகித் தனிச்சொல் இன்றியும்,
தனிச்சொல் பெற்றுப் பலவிகற் பாகியும்
தனிச்சொல் இன்றிப் பலவிகற் பாகியும்,
அடியடி தோறும் ஒரூஉத்தொடை அடைநவும்,
எனஐந் தாகும் இன்னிசை தானே.'

`தொடைஅடி இத்துணை என்னும் வழக்கம்
உடையதை அன்றி, உறுப்பழிவு இல்லா
நடையது பஃறொடை நாமம் கொளலே.
 
 

- காக்கை.

 

 

`தொடைபல தொடுப்பன பஃறொடை வெண்பா.'  
 

- சிறுகாக்கை.

 

 

`தொடைமிகத் தொடுப்பன பஃறொடை வெண்பா.'  
 

 - அவிநயம்

 

 

`ஏழடி இறுதி ஈரடி முதலா
ஏறிய வெள்ளைக்கு இயைந்த அடியே,
மிக்கடி வருவது செய்யுட்கு உரித்தே.'

`ஆறடி முக்கால் பாட்டெனப் படுமே,
ஏறிய அடியும் செய்யுள் வரையார்.'

`ஆதியாய் ஆற்றல் உடைத்தாய் வரம்பிகவா
நீதிசால் நூல்பொருந்தி நிற்றலால் - ஓதநீர்
மண்பாவு தொல்சீர் மறைவாணர் பாற்சார்த்தி
வெண்பா உரைத்தார் விரித்து.'