|
ஒருசார் வெண்டுறையின் ஈற்றடி ஒன்று ஒருசீர் குறைந்து வருவனவும் உள எனவும், வெளி விருத்தம் தனிச்சொல் பெற்று வருங்கால் அளவடியின் உட்பட்டு அடங்காது வரல் வேண்டும் எனவும் கொள்க. சீர் வரையறுத்திலாமையால் வெண்துறை எனைத்துச் சீரானும் அடியாய் வரும் என்க. |
வெள்ளொத்தாழிசைக்குச் செய்யுள் : |
| `நண்பி தென்று தீய சொல்லார், முன்பு நின்று முனிவுசெய்யார், இன்பு வேண்டு பவர்' | | - யா. கா. 28 மே. | |
எனவும், |
ஒருபொருள்மேல் மூன்று அடுக்கி வந்தவெள்ளொத் தாழிசைக்குச் செய்யுள் : |
| `அன்னாய், அறங்கொல்? நலங்கிளர் சேட்சென்னி ஒன்னார் உடைபுறம் போல, நலம்கவர்ந்து துன்னான் துறந்து விடல்' `ஏடி ! அறங்கொல்? நலங்கிளர் சேட்சென்னி கூடார் உடைபுறம் போல, நலங்கவர்ந்து, நேடான் துறந்து விடல்' `பாவாய் ! அறங்கொல்? நலங்கிளர் சேட்சென்னி மேவார் உடைபுறம் போல, நலங்கவர்ந்து, காவான் துறந்து விடல்' | | - யா. கா. 28 மே. | |
இவை ஒருபொருள் மேல் மூன்று அடுக்கி வந்த சிந்தியல் வெண்பா எனவும், |
மூன்று அடியான் வந்த ஓர்ஓலி வெண்துறைக்குச் செய்யுள் : |
| `தாளாளர் அல்லாதார் தாம்பலர் ஆயக்கால் என்னாம் என்னாம்? யாளியைக் கண்டஞ்சி, யானை, தன் கோடிரண்டும் பீலிபோல் சாய்த்து விடும்; பிளிற்றி ஆங்கே' | | - யா. கா. 28 மே. | |