பக்கம் எண் :

128

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
எனவும்,

மூன்று அடியான் வந்த வெளி விருத்தத்திற்குச் செய்யுள் :

 

கொண்டல் முழங்கினவால் கோபம் பரந்தனவால்;  
 

- என்செய்கோயான்

 

 

வண்டு வரிபாட வார்தளவம் பூத்தனவால்;  
 

- என்செய்கோயான்

 

 

எண்திசையும் தோகை இருந்தகவி ஏங்கினவால்;  
 

- என்செய்கோயான்
 - யா. கா. 28 மே.

 

நான்கு அடியான் வந்த வெளி விருத்தத்திற்குச் செய்யுள் :

 

`ஆவா என்றே அஞ்சினர் ஆழ்ந்தார் ; - ஒரு சாரார்
கூகூ என்றே கூவிளி கொண்டார் ; - ஒரு சாரார்
மாமா என்றே மாய்ந்தனர் நீந்தார் ; - ஒரு சாரார்
ஏகீர் நாய்கீர் என்செய்தும், என்றார் ; - ஒரு சாரார்'
 
 

 - யா. கா. 28 மே.

 
எனவும் வரும். பிறவும் வந்துழிக் காண்க. (22)

விளக்கம்

தனியே வந்த வெள்ளொத்தாழிசைக்குச் செய்யுள் :

 

`கனக மார் கவின்செய் மன்றில்
அனக நாட கற்கெம் அன்னை
மனைவிதாய் தங்கை மகள்.'
 
 

 - சி. செ. கோ. 33

 

ஒரு பொருள் மேல் மூன்று அடுக்கி வந்த வெள்ளொத் தாழிசைக்குச் செய்யுள் :

 

`அம்பேருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே !
கொம்பே றுடையான் கழலிறைஞ்சா தென்கொலியாம்
வம்பே இறந்து விடல்.'