பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 22

129

 
  `வாணேருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே !
நீணாகம் பூண்டான் கழலிறைஞ்சா தென்கொலியாம்
வீணே இறந்து விடல்.'

`கோளாருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே !
ஆளாக ஆண்டான் கழலிறைஞ்சா தென்கொலியாம்
வாளா இறந்து விடல்.'
 
 

- சி.செ.கோ. 34

 

மூன்றடியான் வந்த ஓரொலி வெண்டுறைக்குச் செய்யுள் :

  `பரசிருக்கும் தமிழ்மூவர் பாட்டிருக்கும்
திருமன்றில், பரசொன்றேந்தி,
அரசிருக்கும் பெருமானார்க் காட்செய்யார், என்செய்வார்?
முரசிருக்கும் படைநமனார் முன்னாகும் அந்நாளே.'
 
 

- 35

 

நான்கடியான் வந்த ஓரொலி வெண்டுறைக்குச் செய்யுள் :

  `படர்ந்தரும்வெவ் வினைத்தொடர்பால் பவத்தொடர்பு;அப்
     பவத்தொடர்பால் படராநிற்கும்
விடலரும்வெவ் வினைத்தொடர்புஅவ் வினைத்தொடர்புக்
     கொழிபுண்டோ? வினையேற் கம்மா!
இடர்பெரிது முடையேன் ;மற் றென்செய்கேன்;
     என்செய்கேன்?
அடலரவம் அரைக்கசைத்த அடிகேளோ! அடிகேளோ!'
 
 

-36

 

ஏழடியான் வந்த வேற்றொலி வெண்டுறைக்குச் செய்யுள் :

  `கூற்றிருக்கும் அடலாழிக் குரிசில்முத
     லோரிறைஞ்சக் கொழுந்தேன்பில்கி
ஊற்றிருக்கும் தில்லைவனத் தசும்பிருக்கும்
     பசும்பொன்மன்றத் தொருதாளூன்றி,
வண்டுபா டச்சுடர் மகுடமா டப்பிறைத்
துண்டமா டப்புலித் தோலுமா டப்பகிர்
அண்டமா டக்குலைந் தகிலமா டக்கருங்
கொண்டலோ டுங்குழற் கோதையோ டுங்கறைக்
கண்டனா டுந்திறம் காண்மினோ! காண்மினோ!'
 
 

-37