பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 22

131

 
  `அடியொரு மூன்றுவந்து அந்தடி சிந்தாய்
விடின்அது வெள்ளொத் தாழிசை ஆகும்.'
 
 

 - யா. வி. 66

 
  `வெண்டாழிசையே, மூன்றடியாய் வெள்ளை போன்று இறும்.'  
 

- யா. கா. 28

 
  `அடிஐந் தாகியும் மிக்கும் ஈற்றடி
ஒன்றும் இரண்டும் சீர்தபின் வெண்டுறை.'
 
 

- அவிநயம்

 
  `பெற்றஅடி ஐந்தினும் பிறவினும் பாட்டாய்
இற்ற அடியும் ஈற்றயல் அடியும்
ஒன்றும் இரண்டும் நின்ற அதன்சீர்
கண்டன குறையின் வெண்டுறை ஆகும்.'
 
 

- மயேச்சுரம்

 
  `ஐந்துஆறு அடியின் நடந்தவும் அந்தடி
ஒன்றும் இரண்டும் ஒழிசீர்ப் படுநவும்
வெண்டுறை நாமம் விதிக்கப் படுமே.'
 
 

- காக்கை

 
  `மூன்றடி முதலா ஏழடி காறும்வந்து
ஈற்றடி சிற்சில சீர்தப நிற்பினும்
வேற்றொலி விரவினும் வெண்டுறை ஆகும்.'
 
 

- யா. வி. 67

 
  `மூன்று இழிபு ஏழுஉயர்வாய்
ஆன்றடி தாஞ்சில அந்தம்குறைந்திறும் வெண்டுறையே.'
 
 

- யா. கா. 28

 
  `ஒருமூன்று ஒருநான்கு அடியடி தோறும்
தனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை
விருத்தம் எனப்பெயர் வேண்டப் படுமே.'
 
 

- காக்கை

 
  `நான்கும் மூன்றும் அடிதொறும் தனிச்சொல்
தோன்ற வருவன வெளிவிருத் தம்மே.'
 
 

 - சிறுகாக்கை

 
  `மூன்றும் நான்கும் அடிதொறும் தனிச்சொல்
கொளீஇய எல்லாம் வெளிவிருத் தம்மே.'
 
 

- அவிநயம்

 
  `மூவடி ஆகியும் நாலடி ஆகியும்
பாவடி வீழ்ந்து பாடலுள் நயந்தும்
கடிவரை வில்லா அடிதொறும் தனிச்சொல்
திருத்தகு நிலைய விருத்தம் ஆகும்.'
 
 

- மயேச்சுரம்