செய்யுளியல் - நூற்பா எண் 23 | 133 | | ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் | 732. | அகவல் இசையன அகவல் மற்றுஅவை ஏஓ ஈஆய் எனஐஎன்று இறுமே. | | | | | | இது நிறுத்தமுறையானே ஆசிரியப்பா ஆமாறு பொது வகையான் உணர்த்துகின்றது. இ-ள் : அகவல் ஓசையைத் தமக்கு ஓசையாக உடையனவாம் எல்லா ஆசிரியப்பாவும். அவை ஏ என்றும் ஓ என்றும் ஈ என்றும் ஆய் என்றும் என என்றும் ஐ என்றும் இறும் என்றவாறு. மற்று என்ற மிகையானே, ஏந்திசை அகவலும், தூங்கிசை அகவலும், ஒழுகிசை அகவலும், என அகவல் ஓசை மூன்று வகைப்படும். | | `நேர்நேர் இயற்றளை யான்வரும் அகவலும், நிரைநிரை இயற்றளை யான்வரும் அகவலும், ஆயிரு தளையும்ஒத்து ஆகிய அகவலும், ஏந்தல், தூங்கல், ஒழுகல், என்றிவை ஆய்ந்த நிரல்நிறை ஆகும் என்பழு | | | | | | என்ப ஆகலின். | இவற்றிற்குச் செய்யுள் : | | (ஏந்திசை அகவல்) `போதுசாந்தம்......துன்னு வாரேழு | | | - யா. கா. 5 மே. | | | எனவும், | | (தூங்கிசை அகவல்) `அணி நிழல்.....பரிசறுப் பவரேழு | | | - யா. கா. 5 மே. | | | எனவும், | | (ஒழுகிசை அகவல்) `குன்றக்குறவன்......சுணங்கேழு | | | - யா. கா. 9 மே. | | | எனவும் முறையே காண்க. | | | | |