பக்கம் எண் :

138

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

 

`குறளடி சிந்தடி என்றா இரண்டும்
இடைவர நிற்பின் இணைக்குறள்'
 
 

- காக்கை.

 
என்றாரேனும், உரையில் கோடலான் சிந்தடிஇணைதலும் இணைக்குறளாம் எனக்கொள்க.

 

`நேரிசை ஆசிரியப்பாவிற்குச் செய்யுள் :

`நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆரளவு இன்றே; சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே'
 
 

- குறுந். 3
 - யா. கா. 29 மே.

 
எனவும்,

ஈற்று அயல்அடி இரண்டும் சிந்தடியான் வந்த இணைக்குறள்
ஆசிரியப்பாவிற்குச் செய்யுள் :

  `நீரின் தண்மையும், தீயின் வெம்மையும்,
சாரச் சார்ந்தூரத் தீரும்;
சாரல் நாடன் கேண்மை,
சாரச் சாரச் சார்ந்து,
தீரத் தீரத் தீர்பொல் லாதே'
 
 

 - யா. கா. 29 மே.

 
எனவும்,

இருசீர்அடியும் முச்சீர்அடியும் இடைஇடைவந்த இணைக்குறள்
ஆசிரியப்பாவிற்குச் செய்யுள்;

 

`சிறியகள் பெறினே, எமக்கீயும் மன்னே;
பெரியகள் பெறினே,
யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே;
சிறுசோற் றாறும் நனிபல கலத்தன் மன்னே;
பெருஞ்சோற் றானும் நனிபல கலத்தன் மன்னே;
என்பொடு தடிபடு வழியெல்லாம்
எமக்குஈயும் மன்னே;
அம்பொடு வேல்நுழை வழியெல்லாழ்
தான்நிற்கும் மன்னே;
 
 

 - யா. வி. 70