|
730 | ஈரடியான் வருவது குறள் வெண்பா; இரண்டு வெண்பாக்கள் இடையே தனிச்சொல் பெற்று இயைந்து இருவிகற்பமகாவும் ஒருவிகற்பமாகவும் செப்பல் ஓசை சிதையாமலும் வரின் நேரிசை வெண்பா; நான்கு அடிகள் ஒரு விகற்பமோ பல விகற்பமோ உடையவாகித் தனிச்சொல் இன்றி வரின் இன்னிசை வெண்பா; பல அடிகளாக வரும் வெண்பா பஃறொடை வெண்பா; நேரிசை இன்னிசைபோல மூன்று அடியான் வரும் வெண்பா சிந்தியல் வெண்பா என்பது. | 21 | |
731 | நாற்சீர் அடிகள் இரண்டோடு ஈற்று அடி முச்சீராய் வருவது வெள்ளொத்தாழிசை; மூன்றடிச்சிறுமையும் ஏழடிப்பெருமையும் பெற்று ஈற்றடி சில சீர் குன்றி வருதலும், ஓர் ஒலியும் வேற்று ஒலியும் விரவி வருதலும் பொருந்துவது வெண்டுறை; அடிதோறும் நாற்சீரும் ஐந்தாஞ்சீர் ஒரே தனிச்சொல்லுமாய் மூன்று அடியானும் நான்கு அடியானும் அமைவது வெளி விருத்தம்-என்பது. | 22 | |
732 | அகவல் ஓசையை உடையன ஆசிரியப்பாக்களாம்; அவ ஏ ஓ ஈ ஆய் என ஐ - என்பனவற்றான் முடியும் என்பது. | 23 | |
733 | நேரிசை, இணைக்குறள், நிலைமண்டிலம், அடிமறி மண்டிலம் - என ஆசிரியப்பா நான்கு வகைப்படும் என்பது. | 24 | |
734 | கடை அயலடி முச்சீரடியாக வருவது நேரிசை ஆசிரியம்; முதலடியும் ஈற்றடியும் அளவடியாய் இடையே இருசீர் அடியும் முச்சீரடியும் விரவிவர | 25 | |
|
|