அடிமறிமண்டில ஆசிரியப்பாவிற்குச் செய்யுள் : |
| `தீர்த்தம் என்பது சிவகங் கையே; ஏத்த ருந்தலம் எழிற்புலி யூரே; மூர்த்தி அம்பலக் கூத்தன துருவே.' | | | - 45 | | |
என்றும், |
ஒத்த நூற்பாக்கள் |
| `கைக்கிளை ஆசிரியம் வருவ தாயின் முச்சீர் எருத்தின் றாகி முடிவடி எத்திறத் தானும் ஏகாரத் திறுமே.' | | | - கடியநன்னியம் | | |
| `ஈற்றதன் மேலடி ஒருசீர் குறையடி நிற்பது நேரிசை ஆசிரி யம்மே.' | | | - அவிநயம் | | |
| `இறுசீர் அடிமேல் ஒருசீர் குறையடி பெறுவன நேரிசை ஆசிரி யம்மே.' | | | - சிறுகாக்கை | | |
| `அந்த அடியின் அயலடி சிந்தடி வந்தன நேரிசை ஆசிரி யம்மே.' | | | - யா. வி. 71 | | |
| `இடைபல குறைவது இணைக்குறள் ஆகும்.' | | | - அவிநயம் | | |
| `அளவடி அந்தமும் ஆதியும் ஆகிக் குறளடி சிந்தடி என்றா இரண்டும், இடைவர நிற்பது இணைக்குறள் ஆகும்.' | | | - காக்கை. | | |
| `இடைஇடை சீர்தபின் இணைக்குறள் ஆகும்.' | | | - சிறுகாக்கை | | |
| `ஈற்றயல் குறைந்த நேரிசை; இணையாம் ஏற்ற அடியின் இடைபல குறைந்தன.' | | | - மயேச்சுரம் | | |
| `இணைக்குறள் இடைபல குறைந்திறின் இயல்பே.' | | | - யா. வி. 72 | | |
| `ஒத்த அடித்தாய் உலையா மரபொடு நிற்பது தானே நிலைமண் டிலமே.' `என்என் கிளவியை ஈறாப் பெறுதலும் அன்ன பிறவும் அந்தம் நிலைபெற நிற்கவும் பெறூஉம் நிலைமண் டிலமே.' | | |
|