பக்கம் எண் :

142

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

 

`ஒத்த அடித்தாய் உலையா மண்டிலம்
என்என் கிளவியை ஈறா கப்பெறும்
அன்ன பிறவும்அந் நிலைமண் டிலமே.'
 
 

- அவிநயம்

 
  `ஒத்த அடியின நிலைமண் டிலமே.'  
 

 - மயேச்சுரம்

 

 

`என்னெனும் அசைச்சொலும் பிறவும் ஒன்றித்
துன்னவும் பெறூஉம் நிலைமண் டிலமே.'
 
 

 - மயேச்சுரம்

 

 

`என்னென்று இறுதல் வரைநிலை இன்றே.'  
 

- மயேச்சுரம்

 

 

`அல்லா ஒற்றினும் அதனினும் இறுதி,
நில்லா அல்ல நிற்பன வரையார்.'
 
 

- மயேச்சுரம்

 

 

`ஒத்த அடியின தாகியும் ஒற்றிற
நிற்பவும் என்னும் நிலைமண் டிலமே.'
 
 

 - யா. வி. 74

 

 

`உரைப்போர் குறிப்பின் உணர்வகை அன்றி
இடைப்பால் முதல்ஈறு என்றிவை தம்முள்
மதிக்கப் படாதன, மண்டில யாப்பே.
 
 

- காக்கை.

 

 

`கொண்ட அடிமுத லாயொத் திறுவது
மண்டில யாப்பென வகுத்தனர் புலவர்.'
 
 

- சிறுகாக்கை

 

 

`கொண்ட அடிமுத லாயொத் திறுவது,
மண்டிலம் ஒத்திறின் நிலைமண் டிலமே.'
 
 

 - அவிநயம்

 

 

`எவ்வடி யானும் முதல்நடு இறுதி
அவ்வடி பொருள்கொளின் மண்டில யாப்பே.'
 
 

- மயேச்சுரம்

 

 

`எழுவாய் இரட்டித்து இறுதி ஒன்றாய்
வரின்அது மண்டில ஆசிரி யம்மே.'

`மனப்படும் அடிமுத லாயிறின் மண்டிலம்.'
 
 

- யா. வி. 73

 

 

`கடைஅயற் பாதம்முச் சீர்வரின் நேரிசை; காமருசீர்
இடைபல குன்றின் இணைக்குறள்; எல்லா அடியும்ஒத்து
நடைபெறு மாயின் நிலைமண் டிலம்;நடு ஆதிஅந்தத்து
அடைதரு பாதத் தகவல் அடிமறி மண்டிலமே.'
 
 

 -யா. கா. 29