செய்யுளியல் - நூற்பா எண் 26 | 145 | | | `பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன், ஈங்குநம் ஆனுள் வருமேல், அவன்வாயில், ஆம்பல்அம் தீங்குழல் கேளாமோ? தோழி' `கொல்லைஅம் சாரல் குருந்துஓசித்த மாயவன், எல்லைநம் ஆனுள் வருமேல், அவன்வாயில் முல்லைஅம் தீங்குழல் கேளாமோ? தோழி' | | | - சிலப். ஆய். 1 | | | எனவும், | | தனியே வந்த ஆசிரியத்தாழிசைக்குச் செய்யுள் : `வான்உற நிமிர்ந்தனை, வையகம் அளந்தனை, பால்மதி விடுத்தனை, பல்உயிர் ஓம்பினை, நீல்நிற வண்ண!நின் நிறைகழல் தொழுதனம்' | | | - யா. கா. 30 மே. | | | எனவும், | எருத்து அடி குறைந்த ஆசிரியத்துறைக்குச் செய்யுள் : | | `கரைபொரு கான்யாற்றங் கல்லதர் எம்முள்ளி வருதி ராயின் அரைஇருள் யாமத்து அடுபுலியேம்மஞ்சி அகன்று போக; நரைஉரும் ஏறுநும் கைவேல் அஞ்சும்; நும்மை வரைஅர மகளிர் வௌவுதல் அஞ்சுதும்; வாரலையே!' | | | - யா. கா. 30 மே, | | | எனவும், | இடைஇடை குறைந்து வந்த ஆசிரியத்துறைக்குச் செய்யுள் : | | `கொன்றார்ந் தமைந்த குருமுகத் தெழில்நிறக் குருதிக் கோட்டின இருந்தாள் பெருங்கைக் குன்றாமென அன்றாமென குமுறா நின்றன கொடுந்தொழில் வேழம்; வென்றார்ந் தமைந்த விளங்கொளி இளம்பிறைத் துளங்குவாள் இலங்கெயிற் றழல்உளைப் பரூஉத்தாள் அதிரும் வானென எதிரும் கூற்றெனச் சுழலா நின்றன சுழிக்கண் யாளி; | | | | | | |
|
|
|