|
|
| அமைவது இணைக்குறள் ஆசிரியம்; எல்லா அடிகளும் சமமான நாற்சீர் அடிகளாய் வருவது நிலைமண்டில ஆசிரியம்; நாற்சீர் அடிப் பாடலின் எந்த அடியை முதலாகவும் இடையாகவும் கடையாகவும் மாற்றினும் ஓசையும் பொருளும் மாறாதன அடிமறிமண்டில ஆசிரியம் - என்பது. | | |
735 | மூன்றடி ஒத்து முடிவன ஆசிரியத்தாழிசை; கடை அடி குன்றியும் இடை இடையே குன்றியும் இவற்றோடு இடை மடக்கியும் மடக்காமலும் நான்கு அடிகளாய் எனைத்துச் சீரானும் வருவன ஆசிரியத்துறை; கழி நெடில் அடிகள் நான்கு ஒத்து முடிய அமைவன ஆசிரிய விருத்தம் என்பது. | 26 | |
736 | துள்ளல் ஓசையை உடையன கலிப்பாக்களாம். அவை வெள்ளைச் சுரிதகத்தான் ஆவது, ஆசிரியச் சுரிதகத்தான் ஆவது முடியும் என்பது. | 27 | |
737 | கலிப்பா-ஒத்தாழிசைக்கலி, வெண்கலிப்பா, கொச்சகக் கலி என மூவகைப்படும் என்பது. | 28 | |
738 | தரவு ஒன்று தாழிசை மூன்று தனிச்சொல் ஒன்று சுரிதகம் ஒன்று என இவை அமைந்து நிகழ்வது நேரிசை ஒத்தாழிசைக்கலி; தாழிசைக்கும் தனிச் சொல்லிற்கும் இடையே அளவடி, சிந்தடி, குறளடிகளான் ஆகிய அம்போதரங்கம் வர அமைவது அம்போதரங்க ஒத்தாழிசைக்கலி; தரவு தாழிசை அராகம் அம்போ தரங்கம் தனிச்சொல் சுரிதகம் என்ற உறுப்புக்களை உடையது வண்ணக ஒத்தாழிசைக்கலி; வேற்றுத்தளை தட்ட நாற்சீர் அடிகளான் இயன்று ஈற்றடிமுச்சீராய் அமைவது வெண்கலிப்பா; நாற்சீரடிகளான் இயன்று வெண்டளையே தட்டு | 29 | |
|
|
|