| `அகவல் தாழிசை அடிமூன்று ஒத்தவாய் அடுக்கிய மூன்றும் ஒன்றாகியும் வருமே.' | | | - தொ. வி. 244 | | |
| `ஆசிரி யத்துறை அளவில் சீர்வரும் அடிநான்கு ஈற்றயல் ஆதி குறைநவும் இருவழி இடைமடக் கினவும்நால் வகைய.' | | | - 240 | | |
| `விருத்த விகற்பம் விளக்கிய காலை அகவல் கழிநெடி வடிகொள் விருத்தமே.' | | | - 248 | | |
| `மூன்றடி ஒத்து வருவதும் ஒருபொருள் மேல்மூன்று அடுக்கி வருவதும் அகவல் தாழிசை ஆமெனச் சாற்றப் படுமே.' | | | - மு. வீ. யா. செ. 27 | | |
| `அளவடி யாய்ஈற் றயலடி குறைநவும் ஈற்றய லடிகுறைந் திடைமடக் காக வருநவும் இடைஇடை குறைந்து வருநவும் அகவல் துறையென அறையப் படுமே.' | | | - 28 | | |
| `கழிநெடில் அடிநான்கு ஒத்திறின் அகவல் விருத்தம் என்மனார் மெய்யுணர்ந் தோரே.' | | | - 29 | | |
26 |
கலிப்பாவின் பொதுஇலக்கணம் |
736. | துள்ள இசையன கலியே மற்றவை வெள்ளையும் அகவலு மாய்விளைந்து இறுமே. | | | | | |
இது நிறுத்தமுறையானே கலிப்பா ஆமாறு பொது வகையான் உணர்த்துகின்றது. இ-ள் : துள்ளல் ஓசையைத் தமக்கு ஓசையாக உடைனயவாம் எல்லாம் கலிப்பாவும்; அக்கலிப்பாக்கள் வெள்ளைச்சுரிதகத்தால்தான் ஆசிரியச்சுரிதகத்தால்தான் முற்றுப்பெற்று முடியும் என்றவாறு. |
|