பக்கம் எண் :

154

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
     மற்று என்ற மிகையானே ஏந்திசைத்துள்ளலும் அகவல்துள்ளலும்
பிரிந்திசைத்துள்ளலும் எனத் துள்ளல் ஓசை மூன்று வகைப்படும்.

 

`ஏந்திசைத் துள்ளல் கலித்தளை இயையின்;
வெண்டளை தன்தளை என்றிரண்டு இயையின்
ஓன்றிய அகவல் துள்ளலென்று ஓதுப;
தன்தளை பிறதளை என்றுஇவை அனைத்தும்
பொருந்தி வரினே பிரிந்திசைத் துள்ளல்'
 
 

 - அவிநயம்

 
எனக் கூறுப ஆகலின்.
இவற்றிற்குச் செய்யுள்:

ஏந்திசைத் துள்ளல்:

 

`முருகவிழ்தா மரைமலர்மேல் முடிஇமையோர் புடைவரவே,
வருசினனார் தருமறைநூல் வழிபிழையா மனமுடையார்,
இருவினைபோய் விழமுனியா, எதிரியகா தியைஅரியா,
நிருமலராய், அருவினராய், நிலவுவர்,சோ தியினிடையே'
 
 

 -யா. கா. 22 மே.

 
எனவும்,

அகவல் துள்ளல்:

 

`செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினஆழி,
முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய்,
எல்லைநீள் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல்,
மல்லல்ஓங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே'
 
 

- யா. கா. 11 மே.

 
எனவும்,

பிரிந்திசைத் துள்ளல்:

 

குடநிலைத் தண்புறவில் கோவலர் எடுத்தார்ப்ப,
தடநிலைப் பெருந்தொழுவில் தகைஏறு மரம்பாய்ந்து,
வீங்குமணிக் கயிறெரீஇத் தாங்குவனத்து ஏறப்போய்க்