| கலையினொடு முயல்இரிய, கடிமுல்லை முறுவலிப்ப, என ஆங்கு ஆனொடு புல்லிப் பெரும்புதல் முனையும் கானுடைத்து; அவர்தேர் சென்ற ஆறே.' | | | -யா. கா. 22 மே. | | |
எனவும் முறையே காண்க. `விளைந்து' என்ற மிகையானே, ஒருசார் கொச்சகக் கலிப்பாக் கலி அடியானே இறுதலும் கொள்க. இருவகைச் சுரிதகத்தானும் கலியானும் இருமாறு இனிக் காட்டும் கலிப்பாக்களுள் கண்டுகொள்க. |
| `துள்ளல் ஓசை கலிஎன மொழிப.' | | | - தொ. பொ. 395 | | |
| `பிறிதின் நடப்பினும் வஞ்சியும் கலியும் இறுதி மருங்கின் ஆசிரி யம்மே கலியே வெண்பா ஆயினும் வரையார்'. `வகுத்த உறுப்பின் வழுவுதல் இன்றி எடுத்துயர் துள்ளல் இசையன ஆகல் கலிச்சொற் பொருளெனக் கண்டிசி னோரே.' | | | -காக்கை | | |
| `ஆய்ந்த உறுப்பின் அகவுதல் இன்றி ஏய்ந்த துள்ளல் இசையது கலியே.' | | | - அவிநயம் | | |
| `சீரின் கிளந்த தன்தளை தழுவி நேர்ஈற்று இயற்சீர் சேரா தாகித் துள்ளல் ஓசையின் தள்ளா தாகி ஓதப் பட்ட உறுப்புவேறு பலவாய் ஏதம் இல்லன் கலிஎனப் படுமே.' | | | - மயேச்சுரம் | | |
|
| `அளவடி யாய்த்துளல் அமைந்து வருவது கலியாம் என்மனார் கற்றுணர்ந் தோரே,' | | | - மு வீ. யா.செ. 34 | | |
| ` துள்ளல் ஏந்திசை பிரிந்திசை அகவல் எனமூ வகைப்படும் என்மனார் புலவர்.' | | | 44 | | |
| `ஏந்திசைத் துள்ளல் இயையின் கலித்தளை' | | | 45 | | |