பக்கம் எண் :

182

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
  `எவ்விடத்தில் எப்பொருளும் ஒருங்குண்ண இருக்கும்நீ
வெவ்விடத்தை எடுத்தமுது செய்ததுமோர் வியப்பாமோ?'

`எண்பயிலா உலகடங்க ஒருநொடியில் எரித்திடும்நீ
விண்பயிலும் எயில்மூன்றும் எரித்ததும்ஓர் வீறாமே?'

`பெருவெள்ளப் பகிரண்டம் தரித்திடுநீ பெயர்த்துமலை
பொருவெள்ளப் புனற்கங்கை தரித்ததுமோர் புகழாமே?'

`மாயையினா லனைத்துலகும் மயக்கும்நீ மாமுனிவர்
சேயிழையார் சிலர்தம்மை மயக்கியதோர் சிறப்பாமே?'

`மேதக்க புவனங்கள் தொலைத்திடும்நீ வெகுண்டாய்போல்
மாதக்கன் பெருவேள்வி தொலைத்ததுமோர் வன்மையே?'

`ஓருருவாய் நிறைந்தநீ இருவர்க்கன் றுணர்வரிய
பேருருஒன் றுடையையாய் நின்றதுமோர் பெருமையே.'
 
 

[இவை ஆறும் தாழிசை]

 
  `அறிவினில் அறிபவர் அறிவதை அலதொரு
குறியினில் அறிவுறு குறியி னையலை;'

`உளவயின் உளஅளவு உணர்வதை அலதுஉரை
அளவையின் அளவிடும் அளவி னையலை;'

`அருவெனின் உருவமும் உளை,உரு எனின்அரு
உருவமும் உளை,அவை உபய மும்அலை'

`இலதெனின் உளது,உளது எனின்இலது, இலதுஉளது
அலதுஎனின் நினதுஉரு அறிப வர்எவர்?'
 
 

[இவை நான்கும் அராகம்]

 
  `எத்தொழிலும் கரணங்கள் இறந்தநினக் கிலை,ஐந்து
மெய்த்தொழில்செய் வதுமடிகேள் விளையாட்டு நிமித்தமே!'

`சீராட்டு நினக்கிலைஅச் சீராட்டுஞ் சிறுமருங்குல்
பேராட்டி விளையாட்டுன் பெயர்த்தாகி நடந்ததே!'

`மெய்த்துயர முயிர்க்கெய்தும் விளையாட்டும், உலகீன்ற
அத்திருவுக் கிலை;யதுவும் அவர்பொருட்டே யாமன்றே.'
 
     

பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பாவிற்குச் செய்யுள் :

  `ஒருநோக்கம் பகல்செய்ய, ஒருநோக்கம் இருள்செய்ய,
இருநோக்கில் தொழில்செய்தும், துயில்செய்தும் இளைத்துயிர்கள்
கருநோக்கா வகைகருணைக் கண்ணோக்கம் செயுஞானத்
திருநோக்க அருள்நோக்கம் இருநோக்கும் செயச்செய்து,
மருநோக்கும் பொழில்தில்லை மணிமன்றுள் நடஞ்செய்வோய்.'
 
 

[தரவு]