பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 29

191

 
  இடைநிலை வெண்பாச் சிலபல சேர்ந்து
மற்றும் பிறபிற ஒப்புறுப்பு இல்லன
கொச்சகம் என்னும் குறியின ஆகும்.'
 
 

 - காக்கை

 
  `தரவே தரவிணை தாழிசை தாமும்
சிலவும் பலவும் சிறந்தும் மயங்கியும்
மற்றும் விகற்பம் பலவாய் வருநவும்
கொச்சகம் என்னும் குறியின ஆகும்.'
 
 

- யா. வி. 86

 
  `தரவொன்று தாழிசை மூன்று தனிச்சொல் சுரிதகமாய்
நிரல்ஒன்றின் நேரிசை ஒத்தாழிசைக்கலி; நீர்த்திரைபோல்
மரபொன்று நேரடிமுச்சீர் குறள்நடுவே மடுப்பின்,
அரவொன்று மல்குல்! அம்போ தரங்கஒத் தாழிசையே.'
 
 

 - யா. கா. 31

 
  `அசையடி முன்னர் அராகம்வந் தெல்லா வுறுப்புமுண்டேல்
வசையறு வண்ணக ஒத்தாழிசைக்கலி; வான்தளைதட்டு
இசைதனதாகியும் வெண்பா இயைந்துபின், பால்மொழியாய்!
விசையறு சிந்தடி யாலிறு மாய்விடின், வெண்கலியே.'
 
 

- 32

 
  `தரவே தரவிணை தாழிசை தாமும் சிலபலவாய்
மரபே இயன்றும் மயங்கியும் வந்தன...கொச்சகமே.'
 
 

- 33

 
  `தரவொடு தாழிசை சுற்றும் அராகமம் போதரங்கம்
உரவுடை நற்றனி வாரமென் றாங்கலி; ஓர்ந்ததனை
வரவிசை நேரிசை அம்போ தரங்கம்பின் வண்ணகமே
விரவிய கொச்சகம் வெண்கலி என்று விகற்பிப்பரே.'
 
 

 - வீ. சோ. 116

 
  `வண்ணக ஒத்தா ழிசைக்கா றுறுப்பென்பர்; ஐந்துறுப்பு
நண்ணுவ தம்போ தரங்கவொத் தாழிசை; நான்குறுப்பாம்
எண்ணிய நேரிசை ஒத்தா ழிசைதான்; இறுதிசிந்தாய்த்
திண்ணிய நேரடி யால்வரும் வெண்கலி; தேமொழியே.'
 
 

- வீ. சோ. 117