பக்கம் எண் :

192

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
  `நிலவும் தரவுந் தரவிணை யும்நின்ற தாழிசைகள்
சிலவும் பலவும் சிறந்தும் மயங்கியும் சீர்விகற்பம்
பலவும் வரினும், பவளமும் சேலும் பனிமுல்லையும்
குலவும் திருமுகத்தாய்! கொண்டவான்பெயர் கொச்சகமே.'
 
 

 - வீ. சோ. 118

 
  `கலிமுதல் உறுப்பாம் தரவுதா ழிசையே
துணைஉறுப்பு எனக்கூன் சுரிதகம் வண்ணகம்
அம்போ தரங்கம் ஆம்இவை நான்கே.'
 
 

- தொ. வி. 238

 
  `தரவு தாழிசை தன்தளை வெண்டளை
இரண்டுஉறழ்ந் தனஅடி இரண்டும் பலவுமாம்.'
 
 

- தொ. வி. 229

 
  `வண்ணகம் அளவடி வரைமுதல் பலவடி
நான்குஆதி எட்டுஈறாய் நடைமுடுகு அராகமாம்.'
 
 

- தொ. வி. 230

 
  `அம்போ தரங்கம் அம்புஅளாம் திரைபோல்
அளவடி ஈரடி இரண்டும் பேரெண்
அளவடி ஓரடி நான்கும் அளவெண்
சிந்தடி ஓரடி எட்டும் இடையெண்
குறளடி ஓரடி நானான்கும் சிற்றெண்
எட்டும் நானான்கும் நான்கும் எட்டுமாய்ச்
சுருங்கவும் அந்நால் துணைஉறுப்பு உடைத்தே.'
 
 

- தொ. வி. 231

 
  `சுரிதகம் என்ப சுரிந்தெனக் கூனின்
பின்அகவல் வெள்ளை யாக முடிவதே.'
 
 

- தொ. வி. 232

 
  `நேரிசை அம்போ தரங்கம் வண்ணகம்
என்றுஒத் தாழிசை இவைமூன்று; இவற்றினுள்
தரவுஒன்று ஒருமுத் தாழிசை தனிநிலை
சுரிதகம் எனநால் துணைவரு நேரிசை;
தாழிசைக் கீழ்அம் போதரங்கம் சாரவும்
அம்போ தரங்கம்மேல் அராகம் அணையவும்
அம்போ தரங்கமே ஆம்,வண் ணகமாம்.'
 
 

- தொ. வி. 233