பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 29

193

 
  `கொச்சகக் கலிஐங் கூறு பாடென
தரவே தரவிணை தாழிசை சிலபல
சிலபிறழ்ந் துறழ்ந்தும் சிலமயங் கியுமாம்.'
 
 

- தொ. வி. 234

 
  `வெண்கலிக்கு அளவடி பலதளை பலதொடை
மண்டிஈற்று அசைச்சீர் வந்துசிந் தடியாம்
கலிவெண் பாவெண் கலிஎன நடப்பினும்
வலிவெண் டளைதவா வரவும் பலதொடை
நேரிசை வெண்பா நேரவும் பெறுமே.'
 
 

 - 235

 
  `கட்டளைக் கலிப்பா காட்டுங் காலை
ஒருமா கூவிளம் ஒருமூன்று இயைய
நேர்பதி னொன்றுநிரை பன்னீ ரெழுத்தாய்
நடந்துஅடிப் பாதியாய் நான்கடி ஒத்தவாய்
வருவது இன்று வழங்கும் நெறியே.'
 
 

 - 236

 
  `தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகம்
எனுநான்கு உறுப்பினது ஒத்தா ழிசைக்கலி.'
 
 

- மு. வீ. யா. செ. 35

 
  `அளவடி சிந்தடி குறளடி ஆகும்
அசையடி ஆகிய அம்போ தரங்க
உறுப்பைத் தாழிசை தனிச்சொற்கு இடையில்
கொண்டு தரவு தாழிசை அம்போ
தரங்கம் தனிச்சொல் சுரிதகம் என்னும்
ஐந்துறுப் போடும்வரல் அம்போ தரங்க
ஒத்தா ழிசைக்கலி யாமுரை தரினே.'
 
 

- 36

 
  `தாழிசை அம்போ தரங்கக் கிடையே
அராகம் அடைந்துமுன் தரவு தாழிசை
அராகம்அம் போதரங்கம் தனிச்சொல்
சுரிதகம் ஆறொடு தோன்றுவ வண்ணக
ஒத்தா ழிசைக்கலி யாமுரை தரினே.'
 
 

- 37

 
  `தரவுகொச் சகமொரு தரவொடு போதரும்.'  
 

- 38