பக்கம் எண் :

194

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
  `தரவிணைக் கொச்சகம் தான்இரு தரவொடு
தனிச்சொல் சுரிதகம் தழுவியும் வருமே.ழு
 
 

- மூ. வி. யா. செ. 39

 
  `தரவொடு தாழிசை மூன்று தனிச்சொல்
சுரிதகம் நான்கின ஆகும்சிஃ றாழிசை.ழு
 
 

- 40

 
  `தரவொன்று தாழிசை ஆறு தனிச்சொல்
சுரிதகம் நான்கின ஆம்பஃ றாழிசை.ழு
 
 

- 41

 
  `மயங்கி வருவது மயங்கிசைச் கொச்சகக்
கலிப்பா என்மனார் கற்றுணர்ந் தோரே.ழு
 
 

- 42

 
  `கலித்தளை தட்டுக் கலியொலி விரவியும்
வெண்டளை தட்டு வெள்ளொலி தழுவியும்
ஈற்றடி சிந்தடி யாய்வரல் வெண்கலிப்
பாவாம் எனப்பெயர் பகரப் படுமே.ழு
 
 

- 43

 

29

கலிப்பா இனம்
 

739. அடிஎனைத் தாகியும் ஒத்துவந்து அளவினில்
கடைஅடி மிகுவது கலித்தா ழிசையும்,
நெடில்அடி நான்காய் நெறிப்படி நிகழ்வது
கலித்துறை ஆதலும், கலிப்பா விருத்தம்
அளவுஅடி நான்கினது ஆதலும் விதியே.
 
     
இது மேல்கூறிய கலிப்பாவிற்கு இனம் ஆகிய தாழிசை துறை விருத்தங்கள் ஆமாறு
கூறுகின்றது.
     இ-ள் : அடிகள் பலவாயும் சிலவாயும் தம்முள் அளவு ஒத்துவந்து ஈற்றடி மிக்கு
வருவது கலித்தாழிசை ஆதலும், ஐஞ்சீர் அடி நான்காய் ஒழுங்குபட நடப்பது
கலித்துறை ஆதலும், நாற்சீர் அடி நான்கு உடையது கலிவிருத்தம் ஆதலும்
இலக்கணமாம் என்றவாறு.

     `நெறிப்படழு என்றதனானே, கலித்தாழிசை தம்முள் அளவு ஒவ்வாதும் வரும்
எனவும், தனியே வரப்பெறும்