பக்கம் எண் :

196

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
  கேள்வரும் போழ்தில் எழாதாய்க் குறாலியரோ
நீள்வரி நாகத்து எயிறே, வாழி, வெண்திங்காள்!ழு
 
 

 - யா. கா. 34 மே.

 
என வரும்.

பல அடியாய் ஈற்றுஅடி மிக்கு இரண்டாம் அடி குறைந்து முதல் அடியும்
மூன்றாம் அடியும் தம்முள் அளவு ஒத்துத் தனியே வந்த
கலித்தாழிசைக்குச் செய்யுள் :

  `பூண்ட பறைஅறையப் பூதம் மருள
நீண்ட சடையான் ஆடுமே;
நீண்ட சடையான் ஆடும் என்ப,
மாண்ட சாயல் மலைமகள் காணவே காணவேழு
 
 

- யா. கா. 34 மே

 
என வரும்.

நேர் அசை முதலாகிய கட்டளைக் கலித்துறைக்குச் செய்யுள் :

  `தேனார் கமழ்தொங்கல் மீனவன் கேட்பத்தெண் ணீரருவிக்
கானார் மலையத் தருந்தவன் சொன்னகன் னித்தமிழ்நூல்
யானா நடாத்துகின் றேனென் றெனக்கே நகைதருமால்
ஆனா அறிவி னவர்கட்கென் னாங்கொலென் ஆதரவேழு
 
 

- யா. கா. 2

 
எனவும்,

நிரை அசை முதலாகிய கட்டளைக் கலித்துறைக்குச் செய்யுள் :

  `அடிவரை இன்றி அளவொத்தும் அந்தடி நீண்டிசைப்பின்
கடிதலில் லாக்கலித் தாழிசை ஆகும்; கலித்துறையே
நெடிலடி நான்காய் நிகழ்வது; நேரடி ஈரிரண்டாய்
விடின்அது வாகும் விருத்தம்; திருத்தகு மெல்லியலேழு
 
 

 - யா. கா. 34

 
எனவும்,