|
இரண்டாமடி குறைந்து இடைமடக்காய் ஈற்றடி மிக்கு வந்த கலித்தாழிசைக்குச் செய்யுள் : |
| ` காளி ஆடக் கனல்உமிழ் கண்ணுதல் மீளி ஆடுதல் பாருமே! மீளி ஆடல் வியந்துஅவள் தோற்றெனக் கூளி பாடிக் குனிப்பதும் பாருமே பாருமே!' | | | - 71 | | |
நெடிலடி நான்காய்வந்த கலித்துறைக்குச் செயயுள் : |
| `பானல் கருங்கண் பசுந்தோகை யோகப் பயன்துய்ப்பஅத் தேனக் கலர்கொன்றை சாரூப் பியந்தந்த செயலோர்கிலார் ஊனக்க ணிதுபீளை ஒழுகும் புறக்கண், உளக்கண்ணதாம் ஞானக்க ணேயாதல் நல்கும் பிரான்தில்லை நடராசரே.' | | | [இது கலிநிலைத்துறை எனவும் வழங்கப்பெறும்] - 72 | | |
நேரிசை முதலாகிய கட்டளைக் கலித்துறைக்குச் செய்யுள் : |
| `செவ்வாய்க் கருங்கண்பைந் தோகைக்கும் வெண்மதிச் சென்னியற்கும், ஒவ்வாத் திருவுரு ஒன்றே உளதவ் உருவினை மற்றெவ்வாச் சியமென் றெடுத்திசைப்பே மின்னருட் புலியூர்ப் பைவாய்ப் பொறியர வல்குலெந் தாயென்று பாடுதுமே.' | | | - 73 | | |
நிரையசை முதலாகிய கட்டளைக் கலித்துறைக்குச் செய்யுள் : |
| `கரும்பும் சுரும்பும் அரும்பும் பொரும்படைக் காமர்வில்வேள் இரும்பும் கரைந்துரு கச்செய்யு மாலிறும் பூதிதன்றே; விரும்பும் பெரும்புலி யூரெம்பி ரானருள் மேவிலொரு துரும்பும் படைத்தழிக் கும்மகி லாண்டத் தொகுதியையே.' | | | - 74 | | |