பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 30

199

 

அளவடி நான்காய் வந்த கலிவிருத்தத்திற்குச் செய்யுள் :

  `கூகா என்று குரைப்பதல் லால்,சமன்
வாவா என்னின், வரேம்என வல்லிரே
தேவே சன்பயில் தில்லையின் எல்லையில்
சேர்வி ரேல்,அது செய்யவும் வல்லிரே.'
 
 

 - சி. செ. கோ. 75

 

ஒத்த நூற்பாக்கள்

  `அந்தடி மிக்குப் பலசில வாயடி
தந்தமில் ஒன்றிய தாழிசை யாகும்.'
 
 

- காக்கை

 
  `அந்த அடிமிக்கு அல்லா அடியே
தந்தமுள் ஒப்பன கலித்தா ழிசையே.'
 
 

- சிறுகாக்கை

 
  `ஈற்றடி மிக்குஅளவு ஒத்தன ஆகி
பலவும் சிலவும் அடியாய் வரினே
கலிப்பா இனத்துத் தாழிசை ஆகும்.'
 
 

 - அவிநயம்

 
  `அடிபல ஆகியும் கடையடி சீர்மிகின்
கடிவரை இல்லை கலித்தா ழிசையே.'
 
 

 - மயேச்சுரம்

 
  `அடிஎனைத் தாகியும் ஒத்துவந் தளவினில்
கடையடி மிகுவது கலித்தா ழிசையே.'
 
 

- யா. வி. 87

 
  `ஐஞ்சீர் முடிவின் அடித்தொகை நான்மையொடு
எஞ்சா மொழிந்தன எல்லாம் கலித்துறை.'
 
 

- காக்கை

 
  `ஐஞ்சீர் நான்கடி கலித்துறை ஆகும்.'  
 

- அவிநயம்

 
  `நெடிலடி நான்காய் நிகழ்வது கலித்துறை.'  
 

- யா. வி. 88

 
  `நாற்சீர் நாலடி வருவ தாயின்
ஒலியின் இயைந்த கலிவிருத் தம்மே.'
 
 

 - அவிநயம்

 
  `ஐஞ்சீர் நாற்சீர் அடிநான்கு ஆயின்
எஞ்சாக் கலியின் துறையும் விருத்தமும்.'
 
 

- மயேச்சுரம்

 
  `நாலொரு சீரான் நடந்த அடித்தொகை
ஈரிரண் டாகி இயன்றவை யாவும்
காரிகை சான்ற கலிவிருத் தம்மே.'
 
 

- காக்கை