பக்கம் எண் :

200

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
  `நாற்சீர் நாலடி கலிவிருத் தம்மே'  
 

- சிறுகாக்கை

 
  `அளவடி நான்கின கலிவிருத் தம்மே.'  
 

- யா. வி. 89

 
  `அடிவரைஇன்றி அளவொத் தந்தடி நீண்டிசைப்பின்
கடிதலில் லாக்கலித் தாழிசை யாகும்; கலித்துறையே
நெடிலடி நான்காய் நிகழ்வது; நேரடி ஈரிண்டாய்
விடினது வாகும் விருத்தம்; திருத்தகு மெல்லியலே.'
 
 

 - யா. கா. 34

 
  `ஈரடி யாதி எனைத்தடி யானும்வந் தீற்றில்நின்ற
ஓரடி நீளின் கலித்தா ழிசை; ஒலி யோர்விருத்தம்
நேரடி நான்காய் நிகழுமென்றார்; நெடிலென் றுரைத்த
பேரடிநான்கு கலித்துரை யாமென்பர்; பெய்வளையே.'
 
 

 - வீ. சோ. 123

 
  `கலித்தா ழிசையே கடையடி மிக்குமற்று
அடிஎனைத் தாகியும் அளவுஒத்து ஒவ்வாது
ஒருமூன்று அடுக்கியும் ஒன்றுமாய் வருமே.'
 
 

- தொ. வி. 245

 
  `கலித்துறை நெடிலடி நான்குஒத்து அவற்றுள்
இடைநேர் வெண்சீர் இயற்சீர் முதல்நான்கு
இடைநிரை வெண்சீர் இறுதிச்சீர் மோனையாய்க்
கடையே கொண்டுஇறும் கட்டளைக் கலித்துறை.'
 
 

- 241

 
  `விருத்த விகற்பம் வரும்கலி அளவடி'  
 

- 248

 
  `இரண்டடி யாயீற் றடிநீண் டிசைப்பது
கலித்தா ழிசையெனக் கருதப் படுமே.'
 
 

- மு. வீ. யா. செ. 48

 
  `ஒருபொருள் மேல்மூன் றடுக்கி யிரண்டடி
யாக வருவஃது அதன்சிறப் பாகும்.'
 
 

- 49

 
  `ஐஞ்சீ ரடிநான் காய்அள வொத்து
வருவது கலித்துறை யாம்வழுத் திடினே.'
 
 

- 50

 
  `அளவடி நான்காய் வரல்கலி விருத்தம்.'  
 

- 51

 

 30