வஞ்சிப்பா இலக்கணம் |
740. | தூங்கல் இசையன வஞ்சி; மற்றவை ஆய்ந்த தனிச்சொலோடு அகவலின் இறுமே. | | | - சி. செ. கோ. 75 | | |
இது நிறுத்தமுறையானே வஞ்சிப்பாவிற்கு ஓசையும் ஈறும் ஆமாறு கூறுகின்றது. இ-ள் : தூங்கல் ஓசையைத் தமக்கு ஓசையாக உடையனவாம் மேற் கூறிய குறள் அடி வஞ்சிப்பாவும் சிந்து அடி வஞ்சிப்பாவும்; அவ்விருவகை வஞ்சிப்பாவும் ஆராய்ந்த தனிச் சொல்லோடு புணர்ந்து ஆசிரியச் சுரிதகத்தான் இறும் என்றவாறு. மற்ற என்ற மிகையானே ஏந்திசைத் தூங்கலும் அகவல் தூங்கலும் பிரிந்திசைத் தூங்கலும் எனத் தூங்கல் ஓசை மூன்று வகைப்படும். |
| `ஒன்றிய வஞ்சித் தளையே வரினும் ஒன்றாத வஞ்சித் தளையே வரினும் என்றிவை இரண்டும் பிறவும் மயங்கினும் ஏந்தல் அகவல் பிரிந்திசைத் தூங்கலென்று ஆய்ந்த நிரல்நிறை ஆகும் என்ப' | | | - சி. செ. கோ. 75 | | |
எனக் கூறுப ஆகலின். |
இவற்றிற்குச் செய்யுள் : |
ஏந்திசைத் தூங்கல் : |
| `வினைத்திண்பகை விழச்செற்றவன் வனப்பங்கய மலர்த்தாளிணை நினைத்தன்பொடு தொழுதேத்துநர் நாளும் மயலாம் நாற்கதி மருவார்; பெயரா மேற்கதி பெறுகுவர் விரைந்தே' | | | - யா. கா. 22 மே. | | |
எனவும், |