பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 31

203

 
  என்னலத்தகை இதுவென்னென எழில்காட்டிச்
சொன்னலத்தகைப் பொருள்கருத்தி னிற்சிறந்தாங்கு
எனப்பெரிதுங்,
கலங்கஞ ரெய்தி விடுப்பவுஞ்
சிலம்பிடைச் செலவுஞ் சேணிவந் தற்றே'
 
 

 - யா. கா. 23 மே.

 

விளக்கம்

பொதுச்சீர் பதினாறும் வஞ்சிச்சீர் நான்கும் வந்த குறளடி
வஞ்சிப்பாவிற்குச் செய்யுள் :

  `வையமீன்ற மறைக்கிழவனும்
கொய்துழாய்மவுலிக் குணக்கொண்டலும்
தருவார்நீழல் தார்வேந்தனும்
வரன்முறைதாழ்ந்து வாழ்த்திசைப்ப
மைதீர்உணர்வின் மழமுனிவனும்
பையரவரசும் பணிந்திறைஞ்ச
இமயம்பயந்த இளங்கொடியொடும்
தமனியப்பொதுவில் தாண்டவம்புரி
தில்லைவாண! நின் திருவடிக்கீழ்ச்
சொல்லுவதொன்றிது; சொலக்கேண்மதி;
கமலலோசனன் கண்படுக்கும்
அமளியைநின்மருங் காதரித்தனை;
செங்கேழ்நறுநுதல் திருமகளோடும்
அங்கவ னுறைதரும் ஆழிச் சேக்கையைப்
புலிக்கால்முனிவரன் புதல்வனுக்கு
நலத்தகுகருணையின் நயந்தளித்தனை;
        அதனால்,
பாயலும் அமளியும் இன்றி மன்றநின்
வாயிலின் நெடுநாள் வைகினன் அணையொடும்
அத்திரு மனையவற் களித்தி; நின்
மெய்த்தொழில் அன்றே வீடுநல் குவதே.'
இப்பாடலில் `அங்கவன் உறைதரும் ஆழிச் சேக்கையை'
 
 

- சி. செ. கே. 76

 
என்பது ஆசிரிய அடி.