பக்கம் எண் :

204

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
  சிந்தடி வஞ்சிப் பாவிற்குச் செய்யுள் :

`கடித்தாமரைக் கண்ணன்விழிக் கமலந்தர
அடித்தாமரைச் சுடர்ப்பருதி அளித்தருளினை;
             அதனால்,
புதுமலர்ப் பொழில்தில்லை வாண !
உதவியின் வரைத்தோ? அடிகன்கைம் மாறே.'
 
 

 - சி. செ. கோ. 77

 

ஒத்த நூற்பாக்கள்

  `தூங்கல்ஓசை வஞ்சி ஆகும்'  
 

- தொ. பொ. 396

 
  `தன்தளை பாதம் தனிச்சொல் சுரிதகம்
என்றிவை நான்கும் அடுக்கிய தூங்கிசை
வஞ்சி எனப்பெயர் வைக்கப் படுமே.'
 
 

- காக்கை

 
  `தூங்கல் இசையாய்த் தனிச்சொல் சுரிதகம்
தான்பெறும் அடிதளை தழீஇவரை வின்றாய்
எஞ்சாது அமைவது வஞ்சிப் பாவே.'
 
 

- அவிநயம்

 
  `தூங்கல் ஓசை நீங்கா தாகி
நாற்சீர் நிரம்பா அடியிரண்டு உடைத்தாய்
மேற்சீர் ஓதிய ஐஞ்ச்ர் பெற்றுச்
சுரிதகம் ஆசிரியம் உரியதனின் அடுத்து
வந்த தாயின் வஞ்சிப் பாவே.'
 
 

- மயேச்சுரம்

 
  `மன்னவ னென்ப தாசிரி யம்மே
வெண்பா முதலா நால்வகைப் பாவும்
எஞ்சா நாற்பால் வருணர்க் குரிய.'
 
 

- வாய்ப்பியம்

 
 

முழுதும்

 
 

 - யா. வி. 90

 
  `தனிச்சொல் வந்து, மறைதலில் வாரத்தினால் இறும்வஞ்சி.'  
 

 - யா. கா. 35

 
  `சிந்தும் குறளும் அடிஎன்பர் வஞ்சிக்குச் சீர்தனிச்சொல்
அந்தம் சுரிதகம் ஆசிரியத்தான் மருவும்.'
 
 

- வீ. சோ. 119