பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 31, 32

205

 
  `வஞ்சிக்கு ஓசை வழங்கும் தூங்கலே;
தன்சீர் தன்தளை தவிர்ந்து பிறபெறும்
குறளடி சிந்தடி கொண்டு மூவடி
குறையா மூன்றனமேல் கூறில் பெருகத்
தனிச்சொலும் அகவலும் தழுவலோடு இறுமே.'
 
 

- தொ. வி. 237

 
  `தூங்கல் இசையன வஞ்சி மற்றவை
குறளடி சிந்தடி கொடுவரும் எனலே.'
 
 

- மு. வி. யா. செ. 52

 
  `தூங்கல் ஏந்திசை பிரிந்திசை அகவல்
ஆகும் என்மனார் அறிந்திசி னோரே.'
 
 

- 55

 
  `ஒன்றிய வஞ்சித் தளையான் ஒழுகுவது
ஏந்திசைத் தூங்கல் எனப்படும் எனலே.'
 
 

- 56

 
  `ஒன்றாத வஞ்சித் தளையான் வருவது
பிரிந்திசைத் தூங்கல் எனப்பெயர் பெறுமே.'
 
 

- 57

 
  `இவ்விரு தளையும் பிறவும் விரவித்
தொடருவது அகவல் தூங்கல் எனலே.'
 
 

- 58

 
  `இருசீ ரடிஎனைத் தானும் வந்து
தனிச்சொல் பெற்றக வற்சுரி தகத்தால்
வருவது குறளடி வஞ்சி ஆகும்.'
 
 

- 53

 
  `சிந்தடி யாகத் தனிச்சொல் பெற்றே
அகவல் சுரிதகத் தாலே முடிவது
சிந்தடி வஞ்சியாம் செப்புங் காலே.'
 
 

- 54

 

31

வஞ்சிப்பா இனம்

741. குறள்அடி நான்மையின் கோவை மூன்றாய்
வருவன வஞ்சித் தாழிசை ஆதலும்,
ஆங்குஅவை தனிவரின் அதன்துறை ஆதலும்,
பாங்குஅமை சிந்தடி நான்காய் நடப்பது
வஞ்சி விருத்தம் ஆதலும் மரபே.