பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 32

207

 

வஞ்சி விருத்தத்திற்குச் செய்யுள் :

  `சோலை ஆர்ந்த சுரத்திடைக்
காலை ஆர்கழல் ஆர்ப்பவும்
மாலை மார்பன் வருமாயின்
நீல உண்கணிவள் வாழுமே.'
 
 

- யா. கா. 25 மே.

 
எனவும் வரும். (32)

விளக்கம்

குறளடி நான்காய் ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வந்தமையால்
வஞ்சித்தாழிசை ஆயினதற்குச் செய்யுள் :

  `பிணியென்று பெயராமே
துணிநின்று தவம்செய்வீர்;
அணிமன்றல் உமைபாகன்
மணிமன்று பணியிரே.'

`என்னென்று பெயராமே
கன்னின்று தவம்செய்வீர்;
நன்மன்றல் உமைபாகன்
பொன்மன்று பணியிரே.'

`அரிதென்று பெயராமே
வரைநின்று தவம்செய்வீர்;
உருமன்றல் உமைபாகன்
திருமன்று பணியிரே.'
 
 

- சி. செ. கோ. 78

 

குறளடி நான்காய்த் தனித்து வந்தமையாலான வஞ்சித் துறைக்குச்
செய்யுள் :

  பொன்செய் மன்றில்வாழ்
கொன்செய் கோலத்தான்
மின்செய் தாள்தொழார்,
என்செய் கிற்பரே?'
 
 

- சி. செ. கோ. 79