|
சிந்தடி நான்காய் வந்தமையால் ஆன வஞ்சிவிருத்தத்திற்குச் செய்யுள்: |
| `ஒன்றி னம்பர லோகமே ஒன்றி னம்பர லோகமே; சென்று மேவருந் தில்லையே சென்று மேவருந் தில்லையே.' | | | - சி. செ. கோ. 80 | | |
ஒத்த நூற்பாக்கள் |
| `ஒன்றினை நான்மை உடைத்தாய்க் குறளடி வந்தன வஞ்சித் துறையெனல் ஆகும்.' | | | - காக்கை | | |
| `குறளடி நான்கிவை கூடின ஆயின் முறைமையின் அவ்வகை மூன்றிணைந்து ஒன்றி வருவன வஞ்சித் தாழிசை ஆகும்.' | | | - காக்கை | | |
| `எஞ்சா இருசீர் நாலடி மூன்றெனில் வஞ்சித் தாழிசை; தனிவரின் துறையே.' | | | - சிறுகாக்கை | | |
| `இருசீர் நாலடி மூன்றிணைந்து இறுவது வஞ்சித் தாழிசை; தனிவரின் துறையே.' | | | - அவிநயம் | | |
| `இருசீர் நாலடி மூன்றிணைந்து ஒன்றி வருவது வஞ்சித் தாழிசை; தனி நின்று ஒருபொருள் முடிந்தது துறைஎன மொழிப.' | | | - மயேச்சுரம் | | |
| `குறளடி நான்மையின் கோவை மூன்றாய் வருவன வஞ்சித் தாழிசை; தனிவரின் துறைஎன மொழிப, துணிந்திசி னோரே.' | | | - யா. வி. 91 | | |
| `முச்சீர் நாலடி ஒத்தவை வரினே வஞ்சி விருத்தம் என்றனர் கொளலே.' | | | - சிறுகாக்கை | | |
| `தன்சீர் நிலையின் தளைதம தழீஇய இன்பா என்ப இயல்புணர்ந் தோரே ஏனவை விரவின் இடைஎனப் படுமே தானிடை இல்லது கடைஎனப் படுமே.' | | | - மயேச்சுரம் | | |