பக்கம் எண் :

214

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

 

சுள்ளல் சிறுகோல் கொடுத்தான்; தனைப்பெறினும்
செல்லா தியாங்காண் டலை'
 

- யா. கா. 38 மே.

எனவும்,

 

நேர் நிரை நேர்
`கெண், டையை, யே வென்ற கிளரொளி உண்கணாள்
நேர் நிரை நேர்
பண், டைய, ளே அல்லள் படி'
 

- யா. கா. 38 மே.

எனவும்,

 

நேர் நிரை நேர்
`அன்,னையை,யான், நோவ தெவன்?மாண் அணியிழாய்!
நேர் நிரை நேர்
புன்,னையை,யான் நோவன் புலந்து'
 

 - யா. கா. 38 மே.

எனவும் வரும் இவற்றுள் ஐகாரக்குறுக்கம் குற்றெழுத்தே போல நின்று குறிலோடும்
நெடிலோடும் கூடி நிரைஅசை ஆயினவாறு காண்க.

 

நேர் நேர்
`எஃ,ஃ, கிலங்கிய கையராய், இன்னுயிர்
நேர் நேர்நேர்
வெஃ,ஃ, கு வார்க்கில்லை வீடு'
 

- யா. கா. 38 மே.

எனவும்,

 

நேர் நேர்
`கண்,ண் கருவிளை, கார்முல்லை கூரெயிறு,
பொன்,ன் பொறிசுணங்கு, போழ்வாய் இலவம்பூ,
மின்,ன், நுழைமருங்குல், மேதகு சாயலாள்,
என்,ன்? பிறமகளா மாறு'
 

- யா. கா. 38 மே.

எனவும் ஆய்தமும் ஒற்றும் அளபு எழுந்து ஓர் அலகு பெற்றவாறு காண்க.

 

`உணர்ந்தார்க் குணர்வரி யோன்தில்லைச் சிற்றம் பலத்தொருத்தன்
குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச் செவ்வாயிக் கொடி
                                             யிடைதோள்