பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 33

215

 

 

புணர்ந்தால், புணருந் தொறும்,பெரும் போகம்;பின்னும் புதிதாய்,
மணந்தாழ் புரிகுழ லாளல்குல் போல, வளர்கின்றதே'
 
 

- இ. வி. செ. 19

 
என இவ்வாறு ஈரொற்று உடன்நிலையாய் நிற்பினும் அளபு எழாமையின் குற்றெழுத்தின்
பயத்தவாய் அலகு பெறாமை காண்க.

 

`ஈர்ஒற்று ஆயினும் மூஒற்று ஆயினும்
ஓர்ஒற்று இயல என்மனார் புலவர்'
 
     
என்றார் பிறரும் எனக் கொள்க. (33)

விளக்கம்

 

`தளைசீர் வண்ணம் தாம்கெட வரினே
குறுகிய இகரமும் குற்றிய லுகரமும்
அளபெடை ஆவியும் அலகியல் பிலவே.'
 
 

- யா. வி. 4

 

 

`சீர்தளை சிதைவுழி ஈருயிர்க் குறுக்கமும்
நேர்தல் இலவே உயிரள பெடையும்.'
 
 

- மயேச்சுரம்

 

 

`இஉ இரண்டன் குறுக்கம் தளைதப
நிற்புழி ஒற்றாம் நிலையின ஆகும்.'

`உயிரள பேழும் உரைத்த முறையான்
வருமெனின் அவ்வியல் வைக்கப் படுமே.'
 
 

- காக்கை

 

 

`உயிரள பெடையும் குறுகிய உயிரின்
இகர உகரமும் தளைதபின் ஒற்றாம்;
சீர்தப வரினும் ஒற்றியற் றாகும்.'
 
 

- அவிநயம்

 

 

`ஐந்தா றசையி னருகி உகரத்தின்
வந்தசீர் ஒன்றிரண்டு ஒப்பித்து -- நந்துவித்தால்
வஞ்சிப்பா விற்கியலு நாலசைச்சீர், வண்ணுரிச்சீர்
தங்கி விரவத் தகும்.'
`அளபெடை அசைநிலை ஆகலும் உரித்தே.'
 
 

 - தொ. பொ. 329