பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 34

217

 
     இ-ள் : மேல் பொதுவகையான் தனிக்குறில் நேர்அசையாம் என்றார் ஆயினும்
விட்டு இசைத்து நின்ற இடத்து அல்லது மொழிமுதற்கண் நின்ற குற்றெழுத்து நேர்அசை
ஆகாமையும்,

     நெட்டெழுத்து அளபு எடுத்துவரும் எனின் அவ்விரண்டும் நேர்நேர் ஆதலும்,
குற்றெழுத்தோடு புணர்ந்த நெட்டெழுத்து அளபு எழுந்தால் அவ்விரண்டும் நிரைநேர்
ஆதலும் முறை எனப்படும் என்றவாறு.
     எனப்படும் என்ற மிகையானே, விட்டு இசைத்து வருவது குறிப்பின் கண்ணும்
ஏவற்கண்ணும் தற்சுட்டின் கண்ணும் வினாவின் கண்ணும் சுட்டின் கண்ணும் எனவும்,
விட்டு இசைத்து நின்ற இடத்து மற்றொன்றினோடு கூடி நிரைஅசை ஆகாது எனவும்
கொள்க.

 

`உண்ணான் ஒளிநிறான், ஓங்கு புகழ்செய்யான்
துன்னருங் கேளிர் துயர்களையான், - கொன்னே
                                       நேர் நேர்
வழங்கான், பொருள்காத் திருப்பானேல், அ, ஆ
இழந்தானென் றெண்ணப் படும்'
 
 

 - நாலடி 9

 
இதனுள் அஆ என்புழி அருளின்கண் குறிப்பின் விட்டு இசைத்து வந்த குற்றெழுத்து
மொழி முதற்கண் நேர்அசை ஆயினவாறு காண்க.

 

`வெறிகமழ் தண்புறவின் வீங்கி உகளும்
மறிமுலை உண்ணாமை வேண்டிப் -- பறிமுன்கை
நேர் நேர்
அ, உ அறியா அறிவில் இடைமகனே!
நேர் நிரை நேர்
நொ,அலை,யல்; நின்ஆட்டை நீ'
 
 

- யா. கா. 39 மே.

 
எனத் தற்சுட்டின் கண்ணும், ஏவற்கண்ணும்,