பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 35

223

 

 

`நடுநேர் இயலா வஞ்சி உரிச்சீர்
உரிமை உடைய ஆசிரியத் துள்ளே.'
 
 

- சிறுகாக்கை

 

 

`நேரீற்று இயற்சீர் கலிவயின் இலவே
வஞ்சி மருங்கினும் இறுதியின் இலவே.'
 
 

- நற்றத்தம்

 

 

`ஓசையின் ஒன்றி வரினும்வெண் சீரும்
ஆசிரிய அடியின் குறுகும் என்ப.'
 
 

 - பல்காயம்

 

 

`அதனுள் தன்சீர் வெண்சீர் ஒருங்கு
புகலின் கலியுள் பொருந்தும் என்ப.'
 
 

 - பல்காயம்

 

 

`வஞ்சியுள் ஆயின் எஞ்சுதல் இலவே.'  
 

 - பல்காயம்

 

 

`இயற்சீர் இறுதி நேர்உற்ற காலை
வஞ்சி யுள்ளும் வந்த தாகா
ஆயினும் ஒரோவிடத்து ஆகும் என்ப.'
 
 

 - பல்காயம்

 

 

`கலித்தளை அடிவயின் நேர்ஈற்று இயற்சீர்
நிலைக்குரித் தன்றே தெரியு மோர்க்கே.'
 
 

 - தொ. பொ. 337

 

 

`வஞ்சி மருங்கினும் இறுதி நில்லா.'  
 

- 338

 

 

`உரிமையின் இயற்சீர் மயங்கியும் பாநான்கு
இருமை வேறியல் வெண்பா ஆகியும்
வருமெனும் வஞ்சிக் கலியின்நே ரீற்ற
இயற்சீர் ஆகா என்மனார் புலவர்.'
 
 

 - அவிநயம்

 

 

`நிரைஇறு நாலசை வஞ்சியுள் அல்லால்
விரவினும் நேர்ஈற்று அல்லவை நில்லா.'
 
 

- அவிநயம்

 

 

நேர்நடு இயலா வஞ்சி உரிச்சீர்
ஆசிரி யத்தியல் உண்மையும் உடைய.'
 
 

- அவிநயம்

 

 

`நேர்ஈற்று இயற்சீர் கலிவயின் நேரா
நிரையின் நின்ற நாலசை எல்லாம்
வரைதல் வேண்டும் வஞ்சியின் வழியே.'
 
 

- மயேச்சுரம்

 

 

`நிரைநடு இயலா வஞ்சி உரிச்சீர்
வரைதல் வேண்டும் ஆசிரிய மருங்கின்.'
 
 

- மயேச்சுரம்