பக்கம் எண் :

230

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

 

மாயப் புணர்ச்சியும் எல்லாம் உடன்நீங்கச்
சேயுயர் வெற்பனும் புகுந்தனன்;
போதெழில் உண்கண் பொலிகமா இனியே.ழு
 
 

[கலி - குறிஞ் - 3]

 
இக்கலியுள் ஆசிரிய அடியும் வெண்பா அடியும் பலவாக அமைந்துள்ளன.

ஒத்த நூற்பாக்கள்

 

`இயற்சீர் வெள்ளடி ஆசிரிய மருங்கின்
நிலைக்குரி மரபின் நிற்கவும் பெறுமே.ழு
 
 

- தொ. பொ. 374

 

 

`வஞ்சி விரவல் ஆசிரியம் உடைத்தே;
வெண்பா விரவினும் கடிவரை இன்றே.ழு
 
 

- பல்காயம்

 

 

`அகத்திணை அல்வழி ஆங்கதன் மருங்கின்
வகுத்தன சொற்சீர் வஞ்சியொடு மயங்கும்.ழு

`இயற்சீர் வெள்ளடி வஞ்சி அடிஇவை
அகப்பட வரூஉம் அகவலும் உளவே.ழு
 
 

- யா. வி. 29

 

 

`வஞ்சி விரவினும் ஆசிரியம் உரித்தே
வெண்பா விரவினும் கடிவரை இன்றே.ழு
 
 

- நத்தத்தம்

 

 

`வெள்ளடி கலியினுள் விரவவும் பெறுமே.ழு  
 

- யா. வி. 30

 

 

`அகத்திணை மருங்கின் அளவு மயங்கி
விதப்ப மற்றவை வேறா வேண்டி
வஞ்சி அடியின் யாத்திலர், வஞ்சி
அகத்திணை மருங்கின் அணையு மாறே.ழு
 
 

 - பன்னிருபடலம்

 

 

`அகத்திணை அகவயின் நிற்ப வஞ்சி
சிறப்பில எனினும் சிலவிடத் துளவேழு
 
 

 - மாபுராணம்

 

 

`அகப்பா அகவலுள் வஞ்சி,சொற் சீரடி,ஆயிரண்டும்
புகப்பாலனவல்ல என்பதொல் லோர்கள்; புகரில்வஞ்சி

அகப்பாப் பொருளணையா என்பர், நாவலர், ஆங்குஅருகிப்
புகப்பான் மையுமொரு சார்புல வாணர் புகன்றனரே.ழு
 
 

 - நாலடி நாற்பது