பாக்களுக்கு அடிவரையறை |
| நல்வயல் கழனி ஊரன் புகழ்தல் ஆனாப் பெருவண் மையனே.' | | | | | |
எனவும், |
நான்கு அடியான் வந்த கலிப்பாவிற்குச் செய்யுள் : |
| `செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய் எல்லைநீள் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல் மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே.' | | | - யா. கா. 15 மே. | | |
எனவும் வரும். வாளா ஆசிரியம் என்னாது ஆசிரியத்தோடு எனப்பிரித்து ஓதியமையான், ஆசிரியம் சுரிதகமாய் வரும் இடத்து இரண்டு அடியானும் வரும் என்றும், வஞ்சியை முற்கூறினமையான் வஞ்சிப்பா இரண்டு அடியானும் வரும் என்றும் காண்க. |
இரண்டு அடியாய்ச் சுருங்கி வந்த வஞ்சிக்குச் செய்யுள் : |
| `பூந்தண்சினை மலர்மல்கிய பொழிற்பிண்டி வேந்தன்புகழ் பரவாதவர் வினைவெல்லார்; அதனால், அறிவன தடியிணை பரவப் பெறுகுவர் யாவரும் பிறவா நெறியே.' | | | - யா. கா. 14 மே. | | |
என வரும். ஏனைப் பெருமைக்குச் செய்யுள் வந்துழிக் காண்க. | (37) |
ஒத்த நூற்பாக்கள் |
| `ஒருதொடை ஈரடி வெண்பாச் சிறுமை; இருதொடை மூன்றாம் அடியின் இழிந்து வருவன ஆசிரியம் இல்லென மொழிப; வஞ்சியும் அப்பா வழக்கின வாகும்.' | | | - காக்கை | | |