| `நான்காம் அடியினும் மூன்றாந் தொடையினும் தாழ்ந்து கலிப்பாத் தழுவுத லிலவே.' | | | - காக்கை | | |
| `உரைப்போர் குறிப்பினை அன்றிப் பெருமை வரைத்தித் துணையென வைத்துரை இல்லென்று உரைத்தனர் மாதோ உணர்ந்திசி னோரே.' | | | - காக்கை | | |
| `ஒன்றும் இரண்டும் மூன்றும்ஓர் இரண்டும் என்றிம் முறையே பாவின் சிறுமை; தங்குறிப் பினவே தொடையின் பெருமை.' | | | - அவிநயம் | | |
| `ஆசிரியப் பாவின் சிறுமைக் கெல்லை மூவடி ஆகும் பெருமை ஆயிரம், ஈரடி முதலா ஒன்றுதலை சிறந்து ஏழடி காறும் வெண்பாட் டுரிய, வாயுறை வாழ்த்தே செவியறி வுறூஉவே கைக்கிளை மயக்கம கலிவெண் பாட்டே தத்தம் குறிப்பின அளவென மொழிப.' | | | - நத்தத்தம் | | |
| `ஏழடி இறுதி ஈரடி முதலா ஏறிய வெள்ளைக் கியைந்தன அடியே, மிக்கடி வருவது செய்யுள்கட் குரித்தே, மூவடிச் சிறுமை ஆயிரம் ஆகும் ஆசிரி யத்தின் பெருமை அளவே.' | | | - சங்கயாப்பு | | |
| `ஆயிரம் இறுதி மூவடி இழிபா ஆசிரியப் பாட்டின் அடித்தொகை அறிப; ஈரடி முதலா ஏழடி காறும் திரிபில வெள்ளைக்கு அடித்தொகை தானே.' | | | - பல்காயம் | | |
| ஐயிரு நூறடி ஆசிரியம் வஞ்சிச் செய்யுள் நடப்பினும் சிறப்புடைத் தென்ப.' | | | - மயேச்சுரம் | | |
| `பேணும் பொருள்முடிபே பெருமைக் கெல்லை காணுங் காலை, கலியலங் கடையே.' | | | - மயேச்சுரம் | | |
| `கலியுறுப்பு எல்லாம் கட்டளை உடைமையின் நெறியின் முறைவழி நிறுத்தல் வேண்டும்.' | | | - மயேச்சுரம் | | |