பக்கம் எண் :

236

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
  `கொச்சகக் கலிவயின் குறித்தபொருள் முடிவாம்
தாழிசை பலவும் தழுவுதல் முடிபே.ழு
 
 

- மயேச்சுரம்

 
  `வஞ்சி ஆசிரியம் என்றிரு பாட்டும்
எஞ்சா மூவடி இழிவுஉயர்வு ஆயிரம்.ழு
 
 

 - பரிமாணம்

 
  ஆசிரியம் என்பது அகவலின் வழாஅது
கூறிய சீரொடும் தளையொடும் தழீஇ
முச்சீர் அடியான் ஈற்றயல் நின்று
அச்சீர் அடிஇடை ஒரோவழித் தோன்றியும்
அவ்வியல் பின்றி மண்டிலம் ஆகியும்
மூவடி முதலா முறைசிறந்து ஏறித்
தொள்ளா யிரத்துத் தொண்ணூற் றெண்ணிரண்டு
எய்தும் என்ப இயல்புணர்ந் தோரே.ழு ழு

`வஞ்சி தானே அடிவரம்பின்றி
எஞ்சா இசைநிலை தூங்கல் எய்தியும்
ஆசிரியம் ஆகியும் முடியும் என்ப.ழு ழு

`செப்பல் ஓசையின் சீர்தளை சிதையாது
மெய்ப்படக் கிளந்த வெண்பா விரிப்பின்
குறள்நேர் நெடிலென மூன்றாய் அவற்றின்
இறுதி அடியே முச்சீரத் தாகி
அதன்ஈற் றைசச்சீர் எய்தி அடிவகை
ஓரிரண்டு முதலா முறைசிறந்து ஈராறு
ஏறும் என்ப இயல்புணர்ந் தோரே.ழு
 
 

 - பரிமாணம்

 
  `ஈரடி வெண்பாச் சிறுமை மூவடி
ஆசிரி யத்தொடு வஞ்சி எஞ்சியது
ஈரிரண் டடியே இழிபென மொழிப.ழு
 
 

 - யா. வி. 32

 
  `வெள்ளைக் கிரண்டடி, வஞ்சிக்கு மூன்றடி, மூன்றகவற்கு,
எள்ளப் படாக்கலிக் கீரிரண் டாகுமிழிபு; உரைப்போர்
உள்ளக் கருத்தின் அளவே பெருமை.ழு
 
 

- யா. கா. 14

 
  `வெள்ளைக்கு இரண்டடி சிறுமை ஆகும்.ழு  
 

 -மு.வீ.யா.ஒ. 19