|
| குறளடி ஓரடி நானான்கும் சிற்றெண் எட்டும் நானான்கும் நான்கும் எட்டுமாய்ச் சுருங்கவும் அந்நால் துணைஉறுப்பு உடைத்தே.' | | | - தொ. வி. 231 | | |
| `அம்போ தரங்க வண்ணகஒத் தாழிசைக் கலியல் லாத கலிப்பா வினுக்குத் தரவு மூன்றடி சிறுமை, பெருமை உரைப்போன் குறிப்பின ஆம்அள வின்றே.' | | | - மு. வீ. யா. ஒ. 19 | | |
| `அம்போ தரங்க வண்ணகக் குஞ்சிறுமை பெருமை தரவுஇலை, பேசுங் காலை ஆறடி என்மனார், அறிந்திசி னோரே.' | | | - மு. வி. யா. ஒ. 20 | | |
38 |
சில தொடை விகற்பங்கள் |
748. | வருக்கமும் நெடிலும் இனமும் வரினும் திறப்படும் எதுகையும் மோனையும் ஆதலும், உயிரும் யரலழ ஆசும் இடையிட்டும் இரண்டடி மூன்றாம் எழுத்துஒன்றி வரினும் எதுகை ஆதலும், இரணத் தொடைக்கும் கடையே கடையிணை பின்கடைக் கூழை இடைப் புணர்பு இசைதலும் இசையும் என்ப. | | | | | |
இஃது ஒருசார் தொடைகட்கு எய்தியதோர் இலக்கணம் கூறுகின்றது. இ-ள் : வருக்க எழுத்தும் நெடில் எழுத்தும் இன எழுத்தும் எதுகையும் மோனையுமாய் வந்தாலும் கூறுபட வரும் வருக்க எதுகையும் வருக்க மோனையும் நெடில் எதுகையும் நெடில் மோனையும் இன எதுகையும் இன மோனையும் ஆதலும், |