பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 39

243

 

இடையின எதுகைக்குச் செய்யுள் :

 

`எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு'
 
 

- குறள் 299

 
எனவும் வரும். [லகர ஒற்றும் யகர ஒற்றும்]

இனமோனையும் மூன்று வகைப்படும்; வல்லின மோனையும் மெல்லின மோனையும்
இடையின மோனையும் என. அவற்றுள் வல்லின மோனைக்குச் செய்யுள் :

 

`கயலேர் உண்கண் கலுழ, நாளும்
சுடர்புரை திருநுதல் பசலை பாயத்
திருந்திழை அமைத்தோள் அரும்படர் உழப்பப்
போகல்; வாழியர் ஐய! பூத்த
கொழுங்கொடி அணிமலர் தயங்கப்
பெருந்தண் வாடை வரூஉம் பொழுதே'
 
 

 - யா. கா. 43 மே.

 
என வரும். [க-ச-த-ப-மோனை]
மெல்லின மோனையும் இடையின மோனையும் வந்துழிக் கண்டு கொள்க.
[யா. வி. 37 உரை]

உயிரெதுகைக்குச் செய்யுள் :

 

`துளியொடு மயங்கிய தூங்கிருள் நடுநாள்,
அணிகிளர் தாரோய்! அருஞ்சுரம் நீந்தி,
வடிவமை எஃகம் வலவயின் ஏந்தித்
தனியே வருதி, நீஎனின்,
மைஇருங் கூந்தல் உய்தலோ அரிதே'
 
 

 - யா. கா. 43 மே.

 
எனவும் [இகர உயிர்]

யகர ஆசிடை எதுகைக்குச் செய்யுள் :

 

`காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் எற்றிப்
பூமாண்ட தீந்தேன் தொடைகீறி, வருக்கை போழ்ந்து,
தேமாங் கனிசிதறி, வாழைப் பழங்கள் சிந்தும்
ஏமாங் கதமென் றிசையாற் றிசைபோய துண்டே'
 
 

- சிந்தா 31

 
எனவும்,