பக்கம் எண் :

செய்யுளியல் - முன்னுரை

25

 

37

ஈர்அடி வெண்பாச் சிறுமை மூவடி
ஆசிரி யத்தொடு வஞ்சியும் எஞ்சியது
ஒருநான்கு ஆகும் இழிபே.
 
 

 - யாப். 32

 

41

ஒழுகிய ஓசையின் ஒத்துஅடி இரண்டாய்
விழுமிய பொருள்படும் வெண்செந் துறையும்.
 
 

- யாப். 63

 
  அந்தடி குறைநவும் செந்துறைச் சிதைவும்
சந்தழி குறளுமாம் தாழிசைக் குறளும்.
 
 

 - யாப். 64

 
42 அடிமுதல் பொருள்உற வருவது கூன்; அஃது
இறுதியும் வஞ்சியுள் இயலும் என்ப.
 
 

 - யாப். 94

 
  மிகப் பழைய நூற்பாக்களாய் இவ்வாசிரியரால்
கொள்ளப்பட்டவை பின்வருமாறு.
 
     

பழைய நூற்பாக்கள்

2 எழுதப் படுதலின் எழுத்தே; அவ்வெழுத்து
அசைத்துஇசை கோடலின் அசையே; அசைஇயைந்து
சீர்கொள நிற்றலின் சீரே; சீர் இரண்டு
தட்டு நிற்றலின் தளையே; அத்தளை
அடுத்து நடத்தலின் அடியே; அடிஇரண்டு
தொடுத்துமன் சேறலின் தொடையே; அத்தொடை
பாவி நடத்தலின் பாவே; பாஒத்து,
இனமாய் வழங்கலின் இனம்எனப் படுமே.
 
     
16 அடியும் சீரும் அசையும் எழுத்தும்,
முடிவு முதலாச் செய்யுள் மொழியின்,
அந்தாதித் தொடையென்று அறிதல்வேண்டும்.
 
 

- நத்தத்தம்

 
22 ஒருமூன்று ஒருநான்கு அடிஅடி தோறும்
தனிச்சொல் தழுவி, நடப்பது வெள்ளை
விருத்தம் எனப்பெயர் வேண்டலும் விதியே.
 
 

- காக்கைபாடினியம்