பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 40

259

 
  `வாயுறை வாழ்த்தே அவையடக் கியலே
செவியறி வுறூஉவென அவையும் அன்ன.'
 
 

- தொ. பொ. 423

 
  `வாயுறை வாழ்த்தே வயங்க நாடின்
வேம்பும் கடுவும் போல வெஞ்சொல்
தாங்குதல் இன்றி வழிநனி பயக்குமென்று
ஓம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே.'
 
 

- 424

 
  `செவியுறை தானே
பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண்
அவிதல் கடனெனச் செவியுறுத் தன்றே.'
 
 

- 426

 
  `கைக்கிளை தானே வெண்பா ஆகி
ஆசிரிய இயலான் முடியவும் பெறுமே.'
 
 

- 431

 
  `வெள்ளை முதலா ஆசிரியம் இறுதி
கொள்ளத் தொடுப்பது மருட்பா ஆகும்.'

`இருதலைக் காமம் அன்றிக் கைக்கிளை
ஒருதலைக் காமம் ஆகக் கூறிய
இலக்கண மரபின் இயல்புற நாடின்,
அதர்ப்பட மொழிந்தனர் புலவர் அதுவே
பெறுதி வெண்பா உரித்தாய் மற்றதன்
இறுதி எழுசீர் ஆசிரி யம்மே.'
 
 

- கடியநன்னியம்

 
  `கைக்கிளை மருட்பா ஆகி வருகால்
ஆசிரியம் வருவ தாயின் மேவா
முச்சீர் எருத்திற் றாகி, முடியடி
எச்சீ ரானும் ஏகாரத்து இறுமே.'
 
 

- கடியநன்னியம்

 
  `புறநிலை வாயுறை செவியறி வுறூஉவே
அறநிலை வஞ்சியும் கலியும் ஆகாஅ,
வெண்பா ஆசிரிய இயலான் வருமே,
வஞ்சி கலிஅவற்று இயலா; அவற்றுள்
இடைஇரு செய்யுளும் கைக்கிளைப் பாட்டும்
கடையெழு சீரிரண்டு அகவியும் வருமே.'
 
 

- நல்லாதம்