260 | இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | | | | `வேதவாய் மேன்மகனும் வேந்தன் மடமகளும் நீதியால் சேர்ந்து நிகழ்ந்த நெடுங்குலம்போல் ஆதிசால் பாவும் அரசர் வியன்பாவும் ஓதியவாறு ஒன்ற மருட்பாவாய் ஓங்கிற்றே.ழு `கங்கா யமுனை சங்கமம் போலவும் சங்கர நாரணர் சட்டகம் போலவும் வெண்பாவும் ஆசிரி யமுமாய் விராஅய்ப் பண்பார் புறநிலை........ `பண்ணும் திறமும் போல் பாவும் இனமுமாய் வண்ண விகற்ப வகைஇன்றிப் - பண்ணின் திறம்விளரிக் கில்லதுபோல், செப்பல் அகவல் இசைமருட்கும் இல்லை, இனம்.ழு `பண்பார் புறநிலை, பாங்குடைக் கைக்கிளை, வாயுறை வாழ்த்து, ஒண்பாச் செவியறி என்றிப் பொருள்மிசை, ஊனமில்லா வெண்பா முதல்வந் தகவல்பின் னாக விளையுமென்றால் வண்பால் மொழிமடவாய்! மருட்பா வெனும் வையகமே.ழு | | | -யா.கா.36 | | | | `வெள்ளை, முந்திஇறுதி அகவலதாகி முடியுமென்றால், இந்து நுதல்மடவாய்! மருட்பா வென்றியம்புவரே.ழு | | | -வீ. சோ. 119 | | | | மருட்பா வெண்டளை வந்தபின் அகவல் ஈற்றின் மருளும் இயல்புடைத்து என்ப.ழு | | | -தொ.வி.238 | | | | `புறநிலை கைக்கிளை என்றிப் பொருள்மிசை வெண்பா முதல்வந் தகவல்பின் வருவது மருட்பா எனப்பெயர் வைக்கப் படுமே.ழு | | | - மு. வீ. யா. செ. 61 | | | | |
|
|