பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 41

263

 

ஒத்த நூற்பாக்கள்

  `அந்தம் குறையாது அடியிரண் டாமெனின்
செந்துறை என்னும் சிறப்பிற் றாகும்.'
 
 

 -காக்கை.

 
  `ஈரடி இயைந்தது குறள்வெண் பாவே
ஒத்த அடித்தே செந்துறை வெள்ளை.'
 
 

-அவிநயம்

 
  `ஒழுகிய ஓசையின் ஒத்துஅடி இரண்டாய்
விழுமிய பொருளது வெண்செந் துறையே.'
 
 

 - யா. வி. 63

 
  `அந்தடி குறைநவும் செந்துறைச் சிதைவும்
சந்தழி குறளும் தாழிசைக் குறளே.'
 
 

- 64

 
  `உரைத்தன இரண்டும் குறட்பா இனமே.'  
 

- 65

 
  `அந்தமில் பாதம் அளவிரண் டொத்து முடியின்வெள்ளைச்
செந்துறை ஆகும், திருவே! அதன்பெயர் ; சீர்பலவாய்
அந்தம் குறைநவும், செந்துறைப்பாட்டின் இழிபும்,அங்கேழ்ச்
சந்தம் சிதைந்த குறளும் குறளினத் தாழிசையே.'
 
 

 - யா. கா. 27

 
  `ஆயிரண் டொத்து நிகழடி வெண்செந் துறை; இழுகிப்
போமிசைச் செந்துறை, சந்தம் சிதைகுறள், பூண்பலசீர்
தாமது அந்தங் குறைநவு மாங்குறட் டாழிசையே.'
 
 

 - வீ. சோ. 120

 
  `வெண்செந் துறைகுறள் வெண்பா இனமாய்ச்
சீர்தளை அடிஎலாம் சேர்ந்து விரவினும்
ஒத்துஅடி இரண்டாய் ஒழுகும் மற்றே.'
 
 

- தொ. வி 239

 
  `குறட்டா ழிசைஒலி குன்றும் குறளும்
அந்தடி குறைநவும் செந்துறைச் சிதைவுமாம்.'
 
 

- 243

 
  `இரண்டடி யாய்ஈற் றடிசீர் குறைநவும்
செந்துறைப் பாட்டில் சிதைந்து வருநவும்
சந்தழி குறளும் தாழிசைக் குறளே.'
 
 

 - மூ. வீ. யா. செ.17

 
  `தம்முள் அளவொத்த அளவடி இரண்டாய்
விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும்
ஆய்வரல் குறள்வெண் செந்துறை ஆகும்.'
 
 

 - 18

 

41